Monday, April 28, 2008

சித்திரைப் புத்தாண்டு தொடர்.......2

ஒன்றல்ல இரண்டல்ல, பல நூறு கஸ்டங்களையும் பார்த்து பழக்கப்பட்டவள் கௌசி. சில பேர் பணம் கொடுக்காமல், பின்பு தருவதாகச் சொல்லி தைத்த உடுப்புக்களை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோய்விடுவார்கள். அதிகம்பேர் மட்டுமட்டாக துணியைக்கொடுத்து விட்டு, மிச்சத்துணிபற்றி பேச்செடுப்பார்கள். இப்படியாக எல்லாத் துன்பங்களையும்இ அடுக்கடுக்காய் கட்டி ஆள்பவள் தான் கௌசி. சொன்னபடி, வட்டிக்காற சின்ராசுக்கு 1000.00 ரூபாக்களை சேர்த்து கொண்டு கொடுப்பதற்காய் ஆயத்தமானாள். ஏழை உப்பு விற்கப்போனால் மழைவரும் என்பது போல், இவள் வாழ்விலும் புயல் வந்தது போல், அவள் கணவன் குமார் அங்கு வந்தான். கௌசிக்கு விளங்கிவிட்டது. தனக்கு ஆபத்து வந்துவிட்டது என்று. அதனால் தன் பணத்தை மறைத்துவைக்கமுற்பட்டாள். இதனைக்கண்ட குமார் கையாலும் காலாலும் வழமைபோல் அடிஉதைதான். அவள் எவ்வளவோ போராடியும் அவளாள், அந்த அரக்கனிடமிருந்து அந்தப்பணத்தை காப்பாற்ற முடியவில்லை. மீண்டும் துன்பக்கடலில் துடிப்பில்லாத படகு போல். தத்தளித்தாள்.அவளுக்கு உதவ என்று எவரும் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் குமாரின் சுடுசொற்களால் யாரும் உதவ முன்போவதில்லை. ஒருமுறை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கௌசிக்காக கதைக்கப்போகவே....குமார்.....கௌசியையும், அந்தப்புனித பாதிரியாரையும் சேர்த்து வைத்து கதைத்ததில் ஊரே தங்களுக்கு ஏன் வம்பு என்று மௌனமாக இருந்துவிடுவார்கள். கௌசி சாதரணவீட்டு குடும்பத்தில் பிறந்தவள் தான். குமாரை விரும்பி திருமணம் முடித்தவள். 2 குழந்தைகளும் பிறக்கும் மட்டும், சந்தோசமாக வாழ்க்கையை ஓட்டிச்சென்றனர்கள். இனப்பிரச்சனை காரணமாக இடம்பெயர்ந்து திருகோணமலைக்கு வந்து குடியமர்ந்தனர்கள். அப்போது தான் குமார் ஒரு தனியார் கடை ஒன்றில் வேலை பார்த்தான். அந்தக்கடையின் முதலாளியின் மகளுக்கும், குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் அவளை இரண்டாம்திருமணம் முடித்து அவளோடே குடும்பம் நடத்தி கடையையும் கவனித்தான். இத்தனைக்கும் கடையின் முதலாளி இறந்தது அவனுக்குச் சாதகமாகிவிட்டது.எப்பாவது இருந்துவிட்டுதான் கௌசியின் வீட்டிற்கு வருவான். அன்றும் அப்படித்தான், குமார் வந்தான். அவனுக்கு ஆயிரம் ரூபாய் என்பது பெரிய காசு இல்லை. இருப்பினும் ஏனோ அவளிடம் இருப்பதை பிடுங்கவேண்டும் என்ற வெறி அவனுக்கு. பொறுத்தாள் கௌசி. பிள்ளைகளுக்கோ அப்பா ஏன்தான் வருகிறார் என்று தங்களுக்குள் கதைப்பார்கள். அவர்களுக்கு தகப்பனைக்கண்டாலே வெறுப்பு. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை போல், கௌசிக்கும் சின்ராசு அண்ணன் உதவிசெய்தார். குமாரின் பேச்சுகளை அறிந்தவர். அதனால் தன்மனைவியுடன் சேர்ந்து கௌசிக்கு 8000.00 ரூபாயிக்கு ஒரு தையல் மெசின் எடுத்துக்கொடுத்தார். அதன் கடனைவட்டியோடு சிறிது சிறிதாக அடைத்துவந்தாள். " நாளை வருடப்பிறப்பு. பிள்ளைகளுக்கு ஒரு புது உடுப்பு தனிலும் இல்லை. எப்படியாகினும் இன்று துணிவேண்டினால் வழமைபோல் இரவிரவாக தைத்துவிடுவேன்" என்று எண்ணியவளாக...... தன் சோகத்தை மனதில் புதைத்து வைத்துக்கொண்டு, தன் பிள்ளைகளை பக்கத்து வீட்டு லீலாவிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவசரவசரமாக திருகோணமலையில் மார்கட் சின்னக்கடை என்று சொல்லும் இடத்திக்கு ஆட்டோவில் சென்றாள்.திடீர் என்று மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். பல ஆயுதம் ஏந்திய காடையர்கள் கண்மூடித்தனமாக ஆட்களை வெட்டுவதும், தமிழ் கடைகளை தீயிட்டு கொளுத்துவதுமாக தங்கள் இன வெறியாட்டங்களை நடத்தினார்கள். இதில் சிக்குண்டோர் விபரம் அதிகம். கௌசியும் இதில் தான் காடையர்களால் 13.4.06 கொல்லப்பட்டாள். பாவம் அந்தக்குழந்தைகள் தாயின் இறுதிச்சடங்கைக்கூட பார்த்திருக்கவில்லை. குமார் வந்து தன் பிள்ளைகளை தன்னோடு அழைத்துச்சென்றான். இருப்பினும் குமாரின் இரண்டாவது மனைவிக்க இந்தப் பிள்ளைகளை தாங்கள் பொறுப்பேற்பது கொஞ்சமும் இஷ்டமில்லை. இதனால் குமாரின் சம்மதத்தின்பேரில் அக்குழந்தைகள் அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னமும் அக்குழந்தைகள் கதறுவது......." அம்மா பாவம், எங்களுக்கு உடுப்பு வேண்டத்தான் போனவ, இனிமேல் எங்களுக்கு சித்திரைப்புத்தாண்டே வேண்டாம். எங்கள் அம்மா தான் வேணும்.....அம்மா....அம்மா.....அம்மா......தேம்பி அழும் குழந்தைகளுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது.......? (முற்றும்)

இதன் சம்பவங்கள் முற்றிலும் உண்மை. ஒருசில கற்பனைகள் மாத்திரமேகதையாகவுள்ளது.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

No comments: