Monday, April 28, 2008

புரிந்துணர்வு..

பல பெண்களின் போட்டோக்களை தரகர் காட்ட, சிவராமனும், மனைவி சாவித்ரியும் ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்துக்கொண்டிருக்க அங்கே மகன் சாரங்கனும் வேலையால் வீட்டிற்கு வந்தான்.அடடா வந்திட்டியா சாரங்கா....கொஞ்சம் இங்க வந்து உட்காரு...ஓம்.வாறன்....இந்தப்படங்களில உனக்கு யாரைப்பிடிச்சிருக்கு என்று சொல்லு...அட வெட்கப்பட்டா சரியாகுமா...? சொல்லுங்க தம்பி..( இது தரகர்)நோ....நோ...அப்படி ஒன்றுமில்ல.இப்பவுள்ள சூழ்நிலையில என் வருமானம் எனக்கே காணாது. இதில கலியாணத்திற்கு என்ன அவசரம். அதனால வேண்டாம் விட்டிடுங்க.ப்ளீஸ்.யாருடைய பதிலுக்கும் காத்திராமல் எழும்பிச்சென்று விட்டான் சாரங்கன்.மன்னிச்சுக்கொள்ளுங்கோ தரகர்....மகன் சொல்லுவதிலும் ஞாயம் தான். எனக்கு இன்னுமொரு மகள் இருக்கிறாள். அவளுக்கும் இனிதான் சேர்க்கவேணும். இதில எனக்கும் மகன் சொல்லுவது சரியாப்படுகுது.போச்சுடா.......என் டைமே வேஸ்ட் ஆக்கிட்டீங்களே...இனிமே குடும்பத்தில ஏதும் முடிவெடுக்கிறது என்றால் முதலே சம்பந்தப்பட்டவங்கள கேட்டுக்கொள்ளுங்கோ....நான் வாறன்..சில நாட்களின் பின்பு சாரங்கன் ஒரு பெண்ணை வீட்டிற்கு கூட்டிவந்தான். எப்படி அப்பா அம்மாவை சமாளிப்பது என்று தெரியாமல் மெளனமாக நின்றான். இருவரையும் பார்த்து தாய் சாவித்திரி பெரிசாக சத்தம் போட்டு, என்ற வயிற்றில பிறந்து .இப்படிச் செய்திட்டியேடா...என்ன குலமோ, கோத்திரமோ யார் பெற்ற இவளோ......அத பெற்றவங்க சாபத்திற்கு ஆளாகிட்டியே பாவி..எதற்கு இப்ப கத்துறா....இப்ப என்ன ஆகிப்போச்சு..???? சாரங்கன், என் மகன். அவன் ஒரு முடிவெடுத்தா அதில ஞாயம் இருக்கும். அந்த பிள்ள ( பொண்ணு) அவன் கூட வந்திட்டுது. அவவிற்கு என்ன துன்பமோ ..?சாரங்கன்.....நீ இதை பற்றி கவலைப்படாதே. அப்பா நானிருக்கேன். உங்கள் எல்லோருக்கும் சேர்த்து ஆக்கி போட என் சம்பளம் போதும். நீ அம்மா பேசிட்டா என்றதிற்காக வருத்தப்படாதே தெரிஞ்சுதா.. 10 மாசம் சுமந்த வலி இருக்கத்தான் செய்யும். சரி...நம்பி வந்தவளை வாசல்வரை நிற்பாட்டாமல் கூட்டிக்கொண்டு உள்ள போ.உள்ள போன சாரங்கன் கையில உடுப்பு பெட்டியுடன் வந்தான். அப்பா நான் தனியாக என் மனைவி கோமதியுடன் வேற வீடெடுத்து வாழப்போறன். ஐயோ......வேண்டாம்டா ....அப்பா, அம்மா தாங்க மாட்டோம் வேண்டாம். நீ இங்கையே இரு ராசா..நாலு சனம் நாங்க பிரச்சனை எடுதிட்டதா குறை சொல்லும்டா.இல்ல.....நான் இங்க இருக்க விரும்பவி்ல்ல. என்னை போக விடுங்க..வாசல் தாண்டி தன் சயிக்கிளை எடுத்து மிதித்துக்கொண்டு நண்பரை தேடிச்சென்றான் சாரங்கன்.அதுவரை பேசாமல் இருந்த கோமதி...சாரங்கன்...உங்க அப்பா மனசை நோகடிச்சிட்டீங்களே...இல்ல கோமதி.....அப்படி இல்ல. நாங்க அவர் கூட இருந்தால் நானும் வேறு நல்ல வேலை தேட மனசு வராது. அவருக்குச் சுமையாக நானிருக்க விரும்பல்ல. இப்ப குடும்பம் உள்ள சூழ்நிலை எனக்கு நன்றாகத்தெரியும். நான் இதை எடுத்துச் சொன்னாலும் என் அப்பா மனசு தங்கம், வீட்டை விட்டு வெளிய போக விடமாட்டார். நான் எங்கிருந்தாலும் அவங்களை பார்க்கிற கடமையுடன் தான் செயல்படுவேன்.அப்பாவின் ஆறுதலுக்காக சாரங்கன் தங்கை ஜானு..அப்பா அண்ணா பாவம் அப்பா......ஏன் அண்ணா எங்களை விட்டு போனாராப்பா. அம்மா பேசிட்டா என்றுதானே..இல்லம்மா அவன் அப்படிபட்டவனில்ல. ரொம்ப நல்லவன். நாங்க கஸ்டத்தின்மேல் துன்பப்படக்கூடாது என்றுதான் அவன் இந்த முடிவுக்கு வந்தான். தன்னால யாருக்கும் எந்த கெடுதலும் வரக்கூடாது என்ற எண்ணத்திலதான் போயிருக்கான். அப்பா, மகன் புரிந்துணர்வு உணர்ந்து சந்தோசப்பட்டாள் ஜானுவும், அவள் அம்மாவும்...

ஆக்கம்: தனிமதி www.nilafm.com

No comments: