Monday, April 28, 2008

இவர் எங்கே...?

கைப்பையைத் திறந்துபல தடவை படித்து முடித்தபுத்தகம் அது.. இந்த 5 மணிநேர ரயில் போக்குவரத்திற்குஇப்போது அவளுக்குத் துணையாகியிருந்தது...எதேச்சையாக எதிராய் இருந்தவர் மீது சரிவாய்ஒரு பார்வை..... ம்.......பாரன் ஆளை இவ்வளவு நேரமா என்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறாரே.. ம்கூம்....என்று மனதில் திட்டி முதுகை மட்டும்பக்கவாட்டில் திருப்பி மீண்டும் கண்கள் எழுத்துக்ளை படம்பிடித்தது... மனதோ எதிரே இருந்தவர் மீது அதிகமாகியது.ம்......இப்போது பார்ப்போம்....மனது பேசிக்கொண்டதுஅடச்சீ.......என்ன மனுசன் இப்படி விழுங்குமாற்போல...இந்த கூட்டத்தில மாறிக்கூட இருக்கமுடியாதே.....மெதுவாய் ஒரு புன்முறுவல்...எதிரே இருந்த அழகிய மானைக்கண்டுயார் தான் பார்க்காமல் போவார்கள் அப்படி ஒரு அழகு.. இதில் இவன் இப்படி பார்ப்பதில் தப்பேயில்லை.அவளை கண்களால் சாடை காட்டி எப்படி என்றான்.. அவளும் கண்களில் 50 கிலோ நெருப்பை கொட்டி எரித்துப்பார்த்தாள். அவன் உதட்டில் அன்று விரிந்த பூவிதழ் போல் மெலிதான புன்னகை.. அப்போது தான் ரயில் ஏதோ ஒரு தரிப்பில் நிற்க..அவசரமாய் ஒருவர் இறங்கினார்.. ... அடடா அந்தக்குயிலின் பக்கத்தில் இடம் ஒன்று காலி..என் மனமும் அதையே நாடி... பக்கத்தில் வரட்டுமா என்று...மீண்டும் கண்களில் தயாரித்தஅன்றையகுறுந்திரைப்படமாக..அவளுக்கு ஒரு காட்சி... ..ஐயோ.........என்று....பழைய குங்குமம் புத்தகத்தினால் தன் தலையில் அடித்துக்கொண்டாள்....பல மணி நேர இடைவேளை எதுவுமே இல்லை. மெதுவாக எட்டிப்பார்ததாள்...ஆள் அசதியான தூக்கம்....அப்பாடா.....நானும் நின்மதியா தூங்கலாம். ஆழ்ந்த உறக்கம் தூக்கத்தில் ஆழ்த்தியது.பலமக்களின் பேச்சுத் சத்தங்கள் காதை ஊடுறுவ..மெல்லக் கண்களை திறந்து பார்த்தாள்...எங்கே இவர்...எதிரேயிருந்வரைக் காணல்லையே...? எங்கே போயிருப்பார்....???? ம்.....ம்..ரெயில் நின்ற படியால் ஏதும் வேண்டப்போயிருப்பார் போலும்.. மனது அடிக்கடி எட்டி எட்டி பார்க்கச் சொன்னது. அவளும் பார்த்தாள்.ம்..........வரவேயில்லை....விசில் சத்தத்துடன் ரெயில் புறப்பட்டது.அவளின் மனதோ வேகமாக அடித்துக்கொண்டது. ஓடிச்சென்று வாசலின் பக்கத்தில் கைபிடியை பிடித்தபடி காற்றில் அவள் கூந்தல் கலைய மனமோ....அவரைத்தேடி கண்களால் வலை வீசியது.தென்படவில்லை....அழுதாள்..கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் .....பின்னால் ஒருவர்....."பெஸ்ட்டு கண்ணே பெஸ்ட்" என்று கட்டிப்பிடித்தார்.என்னங்க..நீங்க....இப்படிச்செய்திட்டீங்களே......நீங்க மட்டும் இப்ப வரல்லைன்னா......நான் குதிச்சிருப்பேன்.அடடா என் மனைவி கோபத்திலும் குழந்தை மாதிரித்தான்......எல்லாம் இந்த"குங்குமம்" புஸ்தகத்தினால் வந்த விபரீதம்.ஹைய்.பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட் அப்பவே வேண்டி தந்திருந்தால் நமக்கேன் இந்த சண்டை......?நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், இந்த மாதிரி குட்டி குட்டிச் சமாச்சரங்களில் தானடி என் பைங்கிளி.

முற்றும்

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com

No comments: