Monday, April 28, 2008

சித்திரைப் புத்தாண்டு.( பகுதி...1.)

அம்மா...."எனக்குச்சட்டை தைச்சிட்டீங்களாம்மா"....."அம்மா...எனக்கு முதல தைக்கணும்....சரியாம்மா...." இந்த குட்டிகுட்டி சண்டைகளெல்லாம் கௌசல்யாவிற்குப்பழக்கப்பட்டது தான். அதனால் பெரியவள் நிலானியின் கதைக்கும் சின்னவன் கௌதமின் கதைக்கும் காதே கொடுக்காமல் தையல்வேலையில் மும்முறமாக இருந்தாள் கௌசி. வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே, "கௌதம்........ஆர்என்று பாருங்கோ ராசா...." அம்மா........சரோ ஆன்டி......." அட கடவுளே...இன்னும் அவவின்ற உடுப்பு வெட்டவேயில்லை........இப்ப வந்திருக்கிறா.....என்ன சொல்லப்போகிறானோ....கடவுளே நீதான் துணை....மனததிற்குள் தன் பாட்டிக்கு பேசியவளாக, சரோவைக்கண்டவுடன்....என்னசொல்லுவோம் என்று..நினைத்தவளாக....."வாங்கோ....சரோ...என்ன இண்டைக்கு வந்திருக்கிறீங்கள்....வருசம்பிறக்க இன்னும் 3, 4 நாள் இருக்குதானே..."என்ற வார்த்தைகளை சொல்லி முடிக்க முன்பே....சரோவிற்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு..." அப்ப இன்னும் எங்கட உடுப்பு தைக்கவேஇல்லையா.....என்ன கௌசியக்கா.....நீங்கள் சொன்னடேட்டிக்கு தருவீங்கள் என்று தானே உங்களை நம்பி தந்தனான். இப்ப இன்னும் வெட்டவேஇல்லை என்றால்.....என்னமுடிவு....?""இல்ல சரோ எப்படியும் முடிச்சிடுவேன்....குறை நினைக்காமல்.....நாளண்டைக்கு வருவீங்களோ......" "இஞ்ச பாருங்கோ கௌசியக்கா.....நீங்கள் நினைச்சு நினைச்சு சொல்லுவீங்க.....அதெக்கெல்லாம்....நான் தலையாட்ட.....என்ன தலையாட்டி பொம்மையா.....? அதைவிட இப்படி அலைக்கழிய ஆட்டோவிக்கே....100, 200 என்று முடியுது. இதல்லாம் ஆர் தாறது? கொஞ்சம் என்றாலும் எங்களையும் நினையுங்கோ.....இப்படி சொல்லிட்டன் என்று மனதில ஒன்றையும் வைக்காதீங்கோ....அக்கா, என்ற நிலமையில் இருந்து பார்த்தால் தான் உங்களுக்கு விளங்கும்......அப்ப நான் நாளண்டைக்கு நம்பி வாறன் என்ன.." கட கடவென சொல்லவேண்டியதை யெல்லாம் சொல்லிவிட்டாள் சரோ.இப்படியான ஏச்சுக்கலும், பேச்சுக்கலும் கௌசிக்கு பழக்கப்பட்டு போனாலும்......தன் நிலையை நினைத்து கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இதனைப்பார்த்த நிலானி...." ஏம்மா அழுற.....அம்மா.....ஏம்மா .......அந்த அன்டி உங்களை...பேசிறா......?"பிள்ளைகளுக்கு முன்னால் தன் சோகத்தை மறைத்தாள். நிலானியிடம் காசை கொடுத்து பக்கத்து கடையில் பாண் வேண்டி பிள்ளைகளுக்கு சாப்பிடக்கொடுத்து விட்டு. தானும் சாப்பிட்டுவிட்டு...தொடர்ந்தும் தன் தையல்வேலையில் கவணத்தை செலுத்தினாள்.கௌசி.....என்று வாசலில் கூப்பிட்டுக்கொண்டே.....ஜாமினியும், கணவரும்...வந்திருந்தார்கள். "வாங்கோ...வாங்கோ.....உங்கட சாறிபிளவுசும், மாமியின்ற பிளவுசும், சுவேதாவின்ற சட்டையும் தைச்சுப்போட்டேன்....இந்தாங்கோ...." என்று முகமலர்ந்து கையிலே கொடுத்தாள்.மனதிலே ஒருவித சந்தோசம்...எப்படியும்...2 பிளவுஸ், 1 சட்டை. ஒரு 300.00 ரூபா வரும். அத்தோட இன்னும் 250 சேர்ந்தால்.. சொன்னபடி வட்டியை பிறகு கொடுத்தாலும் முதல 1000.00 ரூபாவை கொடுக்கலாம். என்று எண்ணியவளாக இருந்தால். ஜாமினி சாறிபிளவுசினை போட்டு பார்த்து அங்கையும், இங்கையுமாக இழுத்து இழுத்து என்ன குறை இருக்கு என்று பார்த்தாள். இவள் இப்படிபார்ப்பது கௌசிக்கு புது அநுபவமில்லை. அதனால் எப்படா இந்த ஜாமினி போகும் என்றே நினைத்தாள்.... ஒருவாறு ஜாமினிக்கு பூரணதிருப்தி."அப்ப எவ்வளவு காசு என்று சொல்லுங்கோ" என்றாள் ஜாமினி. " 3 ற்கும் 300.00 தாங்கோ" என்று பதிலை சொன்னாள் கௌசி. " என்ன 300.00 ஆ என்று கேட்டது மட்டுமல்லாது....25, 50 ஐ குறையுங்கோ எனக்கேட்டுக் கொண்டாள். எதுவுமே பதில் சொல்லாது தன் கஸ்டத்தையும் வெளிக்காட்டாது மௌனமாய்....உள்ளுக்குள்ளே துன்பத்தையும், வெளியிலே போலியான புன்னகையையும் வரவழைத்து சிரித்துக்கொண்டு நின்றாள் கௌசி.

கௌசியின்....துன்பத்திக்கு இறைவனருள் கிடைக்குமா...? இன்னும் என்னதுன்பம் படப்போகிறாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா...? நேரம் கிடைக்கும் போது தொடர்கின்றேன்.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com

No comments: