Sunday, April 27, 2008

ஊருக்கு உபதேசம்...

வழமைபோல் காயத்திரியும், அவள் படிக்கும் பாடசாலை அதிபராக அவள் தாயாருமாகிய கமலாதேவியும், காலை 7.45 மணிக்கு பாடசாலையை நோக்கி காரில் புறப்பட்டார்கள்.பாடசாலை அதிபர் என்றபடியாலோ என்னவோ, காயத்திரிக்கு வீட்டிலும், பாடசாலையிலும் சுதந்திரம் என்பது சுவாசிக்ககூட முடியாத அளவிற்கு கட்டுப்பாடாகவே இருந்தது.இத்தனைக்கும் அவள் சிறுபிள்ளை இல்லை. ஆண்டு 11 வது படிக்கும் மாணவி. வகுப்பிலும் சரி, வேறு எந்த துறையிலும் அவளின் திறமைகளை அறியாதவர் எவருமில்லை. இதற்குக் காரணம் அவள் பெற்றோர்களே என்று பலராலும் பெருமையாக பேசப்பட்டு வந்தாள் காயத்திரி.அன்று பாடசாலையில் ஆண்டுவிழா. வருடாவருடம் இந்த ஆண்டுவிழாவில், அதிபர் கமலாதேவியும் ஏதாவது ஒன்றைப்பற்றி அழுத்தமாக ஆணித்தரமாக பேசுவது வழக்கம். அன்றும் அதிபர் கமலாதேவி " சாதிகள் என்றில்லை, சவால்களாக பேசுவோம்" என்ற தலைப்பில் தனது பேச்சை தொடங்கி அனைவரும் மெய்மறக்கும் வண்ணம் பேசினார்.சபையோர் யாவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். சில நிமிஷங்களுக்கு கைதட்டியோர் கரங்கள் ஓயவில்லை. பாராட்டு என்றால் அப்படிப்பாராட்டுக்கள். அந்த சந்தோசத்தில் அனைவருக்கும் வணக்கம் கூறி மேடையை விட்டு இறங்கி வந்தார் அதிபர் கமலாதேவி. ஓடோடி வந்த இளையதலைமுறை மாஸ்டர் சஞ்ஜீவ், கைகூப்பி தன் பாராட்டைத்தெரிவித்தார்.அவரைத்தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது உணர்ந்து கொண்டார்.அடடா தன்கருத்தை எவ்வளவு அருமையாகச் செவிமடுத்துக்கொண்டார்கள் என்று.நாட்கள் மாதங்களாகி. வருடங்களாகின. காயத்திரியும் அதே பாடசாலையில் தற்காலிக ஆசிரியை ஆனாள். அன்று ஒருநாள் அதிபரின் வருகைக்காக காத்திருந்து, சஞ்ஜீவ் மாஸ்டர், தயவாகக் கேட்டார். " உங்களுடன் பேர்ஷனலாக ஒருவிசயம் கதைக்கவேணும். அதற்கான நேரத்தை எனக்குத்தருவீங்களா " என்று." ஓ...யெஸ்...நீங்க விரும்பினா இப்பவே சொல்லுங்கோ..."மீண்டும் தயவாய் சொன்னார் மாஸ்டர்.." நான் உங்க மகளை சில மாதங்களாக விரும்புகிறேன்.' நாங்கள்......."ஸ்டொப்...., இஞ்ச பாருங்கோ, நீங்கள் வேறஜாதிக்காறங்க.... நாங்க வேற ஜாதி. இந்தக்காலத்தில யார் இதைப் பார்ப்பாங்க என்று நீங்க நினைக்கலாம். ஆனா நானும் என்ற இனம் சனங்களோட தலைநிமிர்ந்து வாழனும். காறிதுப்புற அளவிற்கு நான் நடக்கமாட்டேன். அதனால நீங்க அவளை மறந்திடுங்க.....என் மானத்தை காப்பாற்றுங்க." கையெடுத்து கும்பிட்டு கேட்டார் கமலாதேவி.மறுபேச்சு எதுவுமின்றி விடைகொடுத்தார் மாஸ்டர் சஞ்ஜீவ்.அம்மா ஒரு நிமிஷம், நீங்க இந்த பாடசாலையில் வைத்து சொல்லுகிற ஒவ்வொரு அறிவுரைகளையும் ஏற்று சிறுவயது முதல் அதன்படி நடந்தவள் நான். மகளாகி, மாணவியாக. அதே போல நீங்க சொன்ன அதே அட்வைஸ்தான் " சாதிகள் பற்றி" நீங்க தந்த விரிவான கருத்து என்னையும் உள்வாங்கியது. அந்த நேரத்தில கம்பஸ் முடித்து வந்த சஞ்ஜீவும், என்மீது தன்காதலைச்சொல்ல அதனை நிச்சயம் நீங்களும் ஏற்பீங்கள் என்ற நம்பிக்கையில அன்பை வளர்த்தேன். இப்பவும் சொல்லுறன் நீங்க சொல்லுகிற அறிவுரையைத்தான் நானும் கேட்டு நடக்கிறேன்.எப்ப உங்க மனம் என்னை ஏற்கிறதோ அப்போது வரவேற்றுக்கொள்ளுங்கள் எங்கள் இருவரையும்.உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான். அம்மாவிற்கு அறிவுரை சொல்லி விடைபெற்றாள் காயத்திரி.

ஆக்கம் : தனிமதி

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: