Monday, April 28, 2008

சித்திரைப் புத்தாண்டு தொடர்.......2

ஒன்றல்ல இரண்டல்ல, பல நூறு கஸ்டங்களையும் பார்த்து பழக்கப்பட்டவள் கௌசி. சில பேர் பணம் கொடுக்காமல், பின்பு தருவதாகச் சொல்லி தைத்த உடுப்புக்களை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோய்விடுவார்கள். அதிகம்பேர் மட்டுமட்டாக துணியைக்கொடுத்து விட்டு, மிச்சத்துணிபற்றி பேச்செடுப்பார்கள். இப்படியாக எல்லாத் துன்பங்களையும்இ அடுக்கடுக்காய் கட்டி ஆள்பவள் தான் கௌசி. சொன்னபடி, வட்டிக்காற சின்ராசுக்கு 1000.00 ரூபாக்களை சேர்த்து கொண்டு கொடுப்பதற்காய் ஆயத்தமானாள். ஏழை உப்பு விற்கப்போனால் மழைவரும் என்பது போல், இவள் வாழ்விலும் புயல் வந்தது போல், அவள் கணவன் குமார் அங்கு வந்தான். கௌசிக்கு விளங்கிவிட்டது. தனக்கு ஆபத்து வந்துவிட்டது என்று. அதனால் தன் பணத்தை மறைத்துவைக்கமுற்பட்டாள். இதனைக்கண்ட குமார் கையாலும் காலாலும் வழமைபோல் அடிஉதைதான். அவள் எவ்வளவோ போராடியும் அவளாள், அந்த அரக்கனிடமிருந்து அந்தப்பணத்தை காப்பாற்ற முடியவில்லை. மீண்டும் துன்பக்கடலில் துடிப்பில்லாத படகு போல். தத்தளித்தாள்.அவளுக்கு உதவ என்று எவரும் வரமாட்டார்கள். அப்படி வந்தாலும் குமாரின் சுடுசொற்களால் யாரும் உதவ முன்போவதில்லை. ஒருமுறை ஒரு கிறிஸ்தவ பாதிரியார் கௌசிக்காக கதைக்கப்போகவே....குமார்.....கௌசியையும், அந்தப்புனித பாதிரியாரையும் சேர்த்து வைத்து கதைத்ததில் ஊரே தங்களுக்கு ஏன் வம்பு என்று மௌனமாக இருந்துவிடுவார்கள். கௌசி சாதரணவீட்டு குடும்பத்தில் பிறந்தவள் தான். குமாரை விரும்பி திருமணம் முடித்தவள். 2 குழந்தைகளும் பிறக்கும் மட்டும், சந்தோசமாக வாழ்க்கையை ஓட்டிச்சென்றனர்கள். இனப்பிரச்சனை காரணமாக இடம்பெயர்ந்து திருகோணமலைக்கு வந்து குடியமர்ந்தனர்கள். அப்போது தான் குமார் ஒரு தனியார் கடை ஒன்றில் வேலை பார்த்தான். அந்தக்கடையின் முதலாளியின் மகளுக்கும், குமாருக்கும் தொடர்பு ஏற்பட்டது. நாளடைவில் அவளை இரண்டாம்திருமணம் முடித்து அவளோடே குடும்பம் நடத்தி கடையையும் கவனித்தான். இத்தனைக்கும் கடையின் முதலாளி இறந்தது அவனுக்குச் சாதகமாகிவிட்டது.எப்பாவது இருந்துவிட்டுதான் கௌசியின் வீட்டிற்கு வருவான். அன்றும் அப்படித்தான், குமார் வந்தான். அவனுக்கு ஆயிரம் ரூபாய் என்பது பெரிய காசு இல்லை. இருப்பினும் ஏனோ அவளிடம் இருப்பதை பிடுங்கவேண்டும் என்ற வெறி அவனுக்கு. பொறுத்தாள் கௌசி. பிள்ளைகளுக்கோ அப்பா ஏன்தான் வருகிறார் என்று தங்களுக்குள் கதைப்பார்கள். அவர்களுக்கு தகப்பனைக்கண்டாலே வெறுப்பு. திக்கற்றவனுக்கு தெய்வம் துணை போல், கௌசிக்கும் சின்ராசு அண்ணன் உதவிசெய்தார். குமாரின் பேச்சுகளை அறிந்தவர். அதனால் தன்மனைவியுடன் சேர்ந்து கௌசிக்கு 8000.00 ரூபாயிக்கு ஒரு தையல் மெசின் எடுத்துக்கொடுத்தார். அதன் கடனைவட்டியோடு சிறிது சிறிதாக அடைத்துவந்தாள். " நாளை வருடப்பிறப்பு. பிள்ளைகளுக்கு ஒரு புது உடுப்பு தனிலும் இல்லை. எப்படியாகினும் இன்று துணிவேண்டினால் வழமைபோல் இரவிரவாக தைத்துவிடுவேன்" என்று எண்ணியவளாக...... தன் சோகத்தை மனதில் புதைத்து வைத்துக்கொண்டு, தன் பிள்ளைகளை பக்கத்து வீட்டு லீலாவிடம் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவசரவசரமாக திருகோணமலையில் மார்கட் சின்னக்கடை என்று சொல்லும் இடத்திக்கு ஆட்டோவில் சென்றாள்.திடீர் என்று மக்கள் நாலா பக்கமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். பல ஆயுதம் ஏந்திய காடையர்கள் கண்மூடித்தனமாக ஆட்களை வெட்டுவதும், தமிழ் கடைகளை தீயிட்டு கொளுத்துவதுமாக தங்கள் இன வெறியாட்டங்களை நடத்தினார்கள். இதில் சிக்குண்டோர் விபரம் அதிகம். கௌசியும் இதில் தான் காடையர்களால் 13.4.06 கொல்லப்பட்டாள். பாவம் அந்தக்குழந்தைகள் தாயின் இறுதிச்சடங்கைக்கூட பார்த்திருக்கவில்லை. குமார் வந்து தன் பிள்ளைகளை தன்னோடு அழைத்துச்சென்றான். இருப்பினும் குமாரின் இரண்டாவது மனைவிக்க இந்தப் பிள்ளைகளை தாங்கள் பொறுப்பேற்பது கொஞ்சமும் இஷ்டமில்லை. இதனால் குமாரின் சம்மதத்தின்பேரில் அக்குழந்தைகள் அன்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்னமும் அக்குழந்தைகள் கதறுவது......." அம்மா பாவம், எங்களுக்கு உடுப்பு வேண்டத்தான் போனவ, இனிமேல் எங்களுக்கு சித்திரைப்புத்தாண்டே வேண்டாம். எங்கள் அம்மா தான் வேணும்.....அம்மா....அம்மா.....அம்மா......தேம்பி அழும் குழந்தைகளுக்கு என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது.......? (முற்றும்)

இதன் சம்பவங்கள் முற்றிலும் உண்மை. ஒருசில கற்பனைகள் மாத்திரமேகதையாகவுள்ளது.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

சித்திரைப் புத்தாண்டு.( பகுதி...1.)

அம்மா...."எனக்குச்சட்டை தைச்சிட்டீங்களாம்மா"....."அம்மா...எனக்கு முதல தைக்கணும்....சரியாம்மா...." இந்த குட்டிகுட்டி சண்டைகளெல்லாம் கௌசல்யாவிற்குப்பழக்கப்பட்டது தான். அதனால் பெரியவள் நிலானியின் கதைக்கும் சின்னவன் கௌதமின் கதைக்கும் காதே கொடுக்காமல் தையல்வேலையில் மும்முறமாக இருந்தாள் கௌசி. வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்கவே, "கௌதம்........ஆர்என்று பாருங்கோ ராசா...." அம்மா........சரோ ஆன்டி......." அட கடவுளே...இன்னும் அவவின்ற உடுப்பு வெட்டவேயில்லை........இப்ப வந்திருக்கிறா.....என்ன சொல்லப்போகிறானோ....கடவுளே நீதான் துணை....மனததிற்குள் தன் பாட்டிக்கு பேசியவளாக, சரோவைக்கண்டவுடன்....என்னசொல்லுவோம் என்று..நினைத்தவளாக....."வாங்கோ....சரோ...என்ன இண்டைக்கு வந்திருக்கிறீங்கள்....வருசம்பிறக்க இன்னும் 3, 4 நாள் இருக்குதானே..."என்ற வார்த்தைகளை சொல்லி முடிக்க முன்பே....சரோவிற்கு வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு..." அப்ப இன்னும் எங்கட உடுப்பு தைக்கவேஇல்லையா.....என்ன கௌசியக்கா.....நீங்கள் சொன்னடேட்டிக்கு தருவீங்கள் என்று தானே உங்களை நம்பி தந்தனான். இப்ப இன்னும் வெட்டவேஇல்லை என்றால்.....என்னமுடிவு....?""இல்ல சரோ எப்படியும் முடிச்சிடுவேன்....குறை நினைக்காமல்.....நாளண்டைக்கு வருவீங்களோ......" "இஞ்ச பாருங்கோ கௌசியக்கா.....நீங்கள் நினைச்சு நினைச்சு சொல்லுவீங்க.....அதெக்கெல்லாம்....நான் தலையாட்ட.....என்ன தலையாட்டி பொம்மையா.....? அதைவிட இப்படி அலைக்கழிய ஆட்டோவிக்கே....100, 200 என்று முடியுது. இதல்லாம் ஆர் தாறது? கொஞ்சம் என்றாலும் எங்களையும் நினையுங்கோ.....இப்படி சொல்லிட்டன் என்று மனதில ஒன்றையும் வைக்காதீங்கோ....அக்கா, என்ற நிலமையில் இருந்து பார்த்தால் தான் உங்களுக்கு விளங்கும்......அப்ப நான் நாளண்டைக்கு நம்பி வாறன் என்ன.." கட கடவென சொல்லவேண்டியதை யெல்லாம் சொல்லிவிட்டாள் சரோ.இப்படியான ஏச்சுக்கலும், பேச்சுக்கலும் கௌசிக்கு பழக்கப்பட்டு போனாலும்......தன் நிலையை நினைத்து கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இதனைப்பார்த்த நிலானி...." ஏம்மா அழுற.....அம்மா.....ஏம்மா .......அந்த அன்டி உங்களை...பேசிறா......?"பிள்ளைகளுக்கு முன்னால் தன் சோகத்தை மறைத்தாள். நிலானியிடம் காசை கொடுத்து பக்கத்து கடையில் பாண் வேண்டி பிள்ளைகளுக்கு சாப்பிடக்கொடுத்து விட்டு. தானும் சாப்பிட்டுவிட்டு...தொடர்ந்தும் தன் தையல்வேலையில் கவணத்தை செலுத்தினாள்.கௌசி.....என்று வாசலில் கூப்பிட்டுக்கொண்டே.....ஜாமினியும், கணவரும்...வந்திருந்தார்கள். "வாங்கோ...வாங்கோ.....உங்கட சாறிபிளவுசும், மாமியின்ற பிளவுசும், சுவேதாவின்ற சட்டையும் தைச்சுப்போட்டேன்....இந்தாங்கோ...." என்று முகமலர்ந்து கையிலே கொடுத்தாள்.மனதிலே ஒருவித சந்தோசம்...எப்படியும்...2 பிளவுஸ், 1 சட்டை. ஒரு 300.00 ரூபா வரும். அத்தோட இன்னும் 250 சேர்ந்தால்.. சொன்னபடி வட்டியை பிறகு கொடுத்தாலும் முதல 1000.00 ரூபாவை கொடுக்கலாம். என்று எண்ணியவளாக இருந்தால். ஜாமினி சாறிபிளவுசினை போட்டு பார்த்து அங்கையும், இங்கையுமாக இழுத்து இழுத்து என்ன குறை இருக்கு என்று பார்த்தாள். இவள் இப்படிபார்ப்பது கௌசிக்கு புது அநுபவமில்லை. அதனால் எப்படா இந்த ஜாமினி போகும் என்றே நினைத்தாள்.... ஒருவாறு ஜாமினிக்கு பூரணதிருப்தி."அப்ப எவ்வளவு காசு என்று சொல்லுங்கோ" என்றாள் ஜாமினி. " 3 ற்கும் 300.00 தாங்கோ" என்று பதிலை சொன்னாள் கௌசி. " என்ன 300.00 ஆ என்று கேட்டது மட்டுமல்லாது....25, 50 ஐ குறையுங்கோ எனக்கேட்டுக் கொண்டாள். எதுவுமே பதில் சொல்லாது தன் கஸ்டத்தையும் வெளிக்காட்டாது மௌனமாய்....உள்ளுக்குள்ளே துன்பத்தையும், வெளியிலே போலியான புன்னகையையும் வரவழைத்து சிரித்துக்கொண்டு நின்றாள் கௌசி.

கௌசியின்....துன்பத்திக்கு இறைவனருள் கிடைக்குமா...? இன்னும் என்னதுன்பம் படப்போகிறாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா...? நேரம் கிடைக்கும் போது தொடர்கின்றேன்.

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com

பாலகனின் பார்வை..

குடும்பம் ஒரு கோவிலாக, எல்லா குடும்பத்தாலும் வாழ முடிவதில்லை. அப்படி கோவிலாக வாழும் குடும்பத்தில் சந்தோசம் என்பது, நிலைத்திருப்பதில்லை. அப்படி தான் இந்தக்குடும்பத்திலும்.அம்மா அப்பாவிற்கு 3 பிள்ளைகள் அதில் ஹென்றி, 3வதாக பிறந்த 4 வயதுச்சிறுவன். படிப்பிலும் சரி, விளையாட்டுத்துறையிலும் சரி பேச்சிலும், மிகச்சிறந்த பையன் ஹென்றி. யாராவது அவனைப்பார்த்தால் காணும், இரண்டு வார்த்தை கதை கேட்காமல் போகமாட்டார்கள். அந்தளவிற்கு, பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் சுட்டித்தனமான துரு துரு வென்ற கண்கள். ஹென்றி தினமும், தன் வீட்டிக்கு அருகாமையில் இருக்கும் வீட்டு பிள்ளைகளோடு மகிழ்ந்தே விளையாடுவான். அவன் விளையாட வருவது, ஒரு தமிழ்குடும்ப பிள்ளைகளோடு தான். தினமும் வரும் ஹென்றி, ஓரிரு நாட்களாகவே விளையாட வரவில்லை என்று, அந்தத் குடும்பத்திடம் சென்று விசாரித்தனர், இந்ததமிழ் குடும்பத்தினர்.அப்போது மிகவும் கவலை தரும் சம்பவத்தை கேட்கநேரிட்டது. ஆம் அந்த 4 வயதுச்சிறுவன் ஹென்றிக்கு, கண்ணிலே கான்சர் நோய். இதனால் ஒரு கண்ணை வைத்தியர்கள் அகற்றினார்கள். இத்துயர் நடைபெற்று பெற்றவர்களோடு அத்தனையுள்ளங்களும் சேர்ந்து துயரத்தில் இருக்க மற்றுமொரு அதிர்ச்சி. ஹென்றியின் மற்றைய கண்ணையும் அந் நோய் தாவிவிட்டது. இதனால் அந்த கண்ணையும் அகற்ற வேண்டும் என வைத்தியர்கள் கூறவே இச்செய்தியறிந்து பெற்றவள் மயங்கி விழுந்தாள். ஒரு கண்ணால் தன் தாயை பார்க்க வேண்டும் என அழுதான் ஹென்றி. தாயும் மகனுடன் இருக்க. வைத்தியர்களிடம், ஹென்றியுடன் படிக்கும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் அந்தச்சிறுவனுக்கு கண் தானமாக கொடுக்க முன் வந்தனர்கள் பலர். ஆனால் எதுவுமே பயனளிக்கவில்லை. ஹென்றியின் பார்வை நரம்புகள் அடீயோடு செயலற்றுப் போய்விட்டதாக வைத்தியர்கள் சொன்னார்கள்.நாளாந்தம் கூட்டம் கூட்டமாக ஹென்றி தங்கியிருக்கும் வைத்தியசாலையை ஆயிரக்கணக்கானோர் சென்று ஹென்றியுடன் படம் எடுப்பதும், ஹென்றியின் விருப்பத்தை பூர்த்தி செய்வதுமாக அலையலையாய் திரளாய் மக்கள். இதில் இந்த தமிழ் குடும்பமும் அடங்குவர்.மறு நாள் கண்அகற்றப்படும் நாள். முதல் நாள் ஹென்றியிடம் கேட்டனர், ஹென்றி, உங்களுக்கு என்ன பார்க்க ஆசையாகவுள்ளது ? எனக்கேட்டனர். அதற்கு தன் அம்மா தன்னோடு தான் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றான். அடுத்து தன் அப்பாவும் மற்றைய 2 சகோதரர்களோடும் நிறைய பார்க்க வேண்டும் என்றானாம். அவனை படிப்பித்த ஆசிரியர்கள் வரவே , அவர்கள் மூலம், கடைசியாக படிக்கவேண்டும் என்று ஆசைப்படவே, அதற்கான ஒழுங்குகள் வைத்தியசாலையில் ஏற்பாடு செய்தனர்கள். ஹென்றிக்கு கிரிகெட் என்றால் நல்ல விருப்பம். இதனால் அவர்களையும் பார்க்க விரும்பி, அவுஸ்திரேலியா கிரிகட் விளையாட்டு வீரர்கள் வைத்தியசாலை சென்று ஹென்றியின் ஆசையைகண்ணீரோடு பூர்த்திசெய்தனர்.இரண்டு கண்களையும் இழந்து அந்தச்சிறுவன். இன்னும் மகிழ்ச்சியாக வாழ்கிறான். தனக்கு இனி கண் பார்வை வராது என்று தெரியாமல், வரும் என்ற நம்பிக்கையோடு.

இந்தச்சம்பவம், அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் தங்கை, மனவேதனையுடன் தொலைபேசியில் கூறியதை, கதையாக வடித்துள்ளேன். அந்தச்சிறுவனின் வாழ்க்கைக்கு இறைவன் துணைபுரிய வேண்டுகிறேன்.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

இவர் எங்கே...?

கைப்பையைத் திறந்துபல தடவை படித்து முடித்தபுத்தகம் அது.. இந்த 5 மணிநேர ரயில் போக்குவரத்திற்குஇப்போது அவளுக்குத் துணையாகியிருந்தது...எதேச்சையாக எதிராய் இருந்தவர் மீது சரிவாய்ஒரு பார்வை..... ம்.......பாரன் ஆளை இவ்வளவு நேரமா என்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறாரே.. ம்கூம்....என்று மனதில் திட்டி முதுகை மட்டும்பக்கவாட்டில் திருப்பி மீண்டும் கண்கள் எழுத்துக்ளை படம்பிடித்தது... மனதோ எதிரே இருந்தவர் மீது அதிகமாகியது.ம்......இப்போது பார்ப்போம்....மனது பேசிக்கொண்டதுஅடச்சீ.......என்ன மனுசன் இப்படி விழுங்குமாற்போல...இந்த கூட்டத்தில மாறிக்கூட இருக்கமுடியாதே.....மெதுவாய் ஒரு புன்முறுவல்...எதிரே இருந்த அழகிய மானைக்கண்டுயார் தான் பார்க்காமல் போவார்கள் அப்படி ஒரு அழகு.. இதில் இவன் இப்படி பார்ப்பதில் தப்பேயில்லை.அவளை கண்களால் சாடை காட்டி எப்படி என்றான்.. அவளும் கண்களில் 50 கிலோ நெருப்பை கொட்டி எரித்துப்பார்த்தாள். அவன் உதட்டில் அன்று விரிந்த பூவிதழ் போல் மெலிதான புன்னகை.. அப்போது தான் ரயில் ஏதோ ஒரு தரிப்பில் நிற்க..அவசரமாய் ஒருவர் இறங்கினார்.. ... அடடா அந்தக்குயிலின் பக்கத்தில் இடம் ஒன்று காலி..என் மனமும் அதையே நாடி... பக்கத்தில் வரட்டுமா என்று...மீண்டும் கண்களில் தயாரித்தஅன்றையகுறுந்திரைப்படமாக..அவளுக்கு ஒரு காட்சி... ..ஐயோ.........என்று....பழைய குங்குமம் புத்தகத்தினால் தன் தலையில் அடித்துக்கொண்டாள்....பல மணி நேர இடைவேளை எதுவுமே இல்லை. மெதுவாக எட்டிப்பார்ததாள்...ஆள் அசதியான தூக்கம்....அப்பாடா.....நானும் நின்மதியா தூங்கலாம். ஆழ்ந்த உறக்கம் தூக்கத்தில் ஆழ்த்தியது.பலமக்களின் பேச்சுத் சத்தங்கள் காதை ஊடுறுவ..மெல்லக் கண்களை திறந்து பார்த்தாள்...எங்கே இவர்...எதிரேயிருந்வரைக் காணல்லையே...? எங்கே போயிருப்பார்....???? ம்.....ம்..ரெயில் நின்ற படியால் ஏதும் வேண்டப்போயிருப்பார் போலும்.. மனது அடிக்கடி எட்டி எட்டி பார்க்கச் சொன்னது. அவளும் பார்த்தாள்.ம்..........வரவேயில்லை....விசில் சத்தத்துடன் ரெயில் புறப்பட்டது.அவளின் மனதோ வேகமாக அடித்துக்கொண்டது. ஓடிச்சென்று வாசலின் பக்கத்தில் கைபிடியை பிடித்தபடி காற்றில் அவள் கூந்தல் கலைய மனமோ....அவரைத்தேடி கண்களால் வலை வீசியது.தென்படவில்லை....அழுதாள்..கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் .....பின்னால் ஒருவர்....."பெஸ்ட்டு கண்ணே பெஸ்ட்" என்று கட்டிப்பிடித்தார்.என்னங்க..நீங்க....இப்படிச்செய்திட்டீங்களே......நீங்க மட்டும் இப்ப வரல்லைன்னா......நான் குதிச்சிருப்பேன்.அடடா என் மனைவி கோபத்திலும் குழந்தை மாதிரித்தான்......எல்லாம் இந்த"குங்குமம்" புஸ்தகத்தினால் வந்த விபரீதம்.ஹைய்.பெஸ்ட்டு கண்ணா பெஸ்ட் அப்பவே வேண்டி தந்திருந்தால் நமக்கேன் இந்த சண்டை......?நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், இந்த மாதிரி குட்டி குட்டிச் சமாச்சரங்களில் தானடி என் பைங்கிளி.

முற்றும்

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி
www.nilafm.com

புரிந்துணர்வு..

பல பெண்களின் போட்டோக்களை தரகர் காட்ட, சிவராமனும், மனைவி சாவித்ரியும் ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்துக்கொண்டிருக்க அங்கே மகன் சாரங்கனும் வேலையால் வீட்டிற்கு வந்தான்.அடடா வந்திட்டியா சாரங்கா....கொஞ்சம் இங்க வந்து உட்காரு...ஓம்.வாறன்....இந்தப்படங்களில உனக்கு யாரைப்பிடிச்சிருக்கு என்று சொல்லு...அட வெட்கப்பட்டா சரியாகுமா...? சொல்லுங்க தம்பி..( இது தரகர்)நோ....நோ...அப்படி ஒன்றுமில்ல.இப்பவுள்ள சூழ்நிலையில என் வருமானம் எனக்கே காணாது. இதில கலியாணத்திற்கு என்ன அவசரம். அதனால வேண்டாம் விட்டிடுங்க.ப்ளீஸ்.யாருடைய பதிலுக்கும் காத்திராமல் எழும்பிச்சென்று விட்டான் சாரங்கன்.மன்னிச்சுக்கொள்ளுங்கோ தரகர்....மகன் சொல்லுவதிலும் ஞாயம் தான். எனக்கு இன்னுமொரு மகள் இருக்கிறாள். அவளுக்கும் இனிதான் சேர்க்கவேணும். இதில எனக்கும் மகன் சொல்லுவது சரியாப்படுகுது.போச்சுடா.......என் டைமே வேஸ்ட் ஆக்கிட்டீங்களே...இனிமே குடும்பத்தில ஏதும் முடிவெடுக்கிறது என்றால் முதலே சம்பந்தப்பட்டவங்கள கேட்டுக்கொள்ளுங்கோ....நான் வாறன்..சில நாட்களின் பின்பு சாரங்கன் ஒரு பெண்ணை வீட்டிற்கு கூட்டிவந்தான். எப்படி அப்பா அம்மாவை சமாளிப்பது என்று தெரியாமல் மெளனமாக நின்றான். இருவரையும் பார்த்து தாய் சாவித்திரி பெரிசாக சத்தம் போட்டு, என்ற வயிற்றில பிறந்து .இப்படிச் செய்திட்டியேடா...என்ன குலமோ, கோத்திரமோ யார் பெற்ற இவளோ......அத பெற்றவங்க சாபத்திற்கு ஆளாகிட்டியே பாவி..எதற்கு இப்ப கத்துறா....இப்ப என்ன ஆகிப்போச்சு..???? சாரங்கன், என் மகன். அவன் ஒரு முடிவெடுத்தா அதில ஞாயம் இருக்கும். அந்த பிள்ள ( பொண்ணு) அவன் கூட வந்திட்டுது. அவவிற்கு என்ன துன்பமோ ..?சாரங்கன்.....நீ இதை பற்றி கவலைப்படாதே. அப்பா நானிருக்கேன். உங்கள் எல்லோருக்கும் சேர்த்து ஆக்கி போட என் சம்பளம் போதும். நீ அம்மா பேசிட்டா என்றதிற்காக வருத்தப்படாதே தெரிஞ்சுதா.. 10 மாசம் சுமந்த வலி இருக்கத்தான் செய்யும். சரி...நம்பி வந்தவளை வாசல்வரை நிற்பாட்டாமல் கூட்டிக்கொண்டு உள்ள போ.உள்ள போன சாரங்கன் கையில உடுப்பு பெட்டியுடன் வந்தான். அப்பா நான் தனியாக என் மனைவி கோமதியுடன் வேற வீடெடுத்து வாழப்போறன். ஐயோ......வேண்டாம்டா ....அப்பா, அம்மா தாங்க மாட்டோம் வேண்டாம். நீ இங்கையே இரு ராசா..நாலு சனம் நாங்க பிரச்சனை எடுதிட்டதா குறை சொல்லும்டா.இல்ல.....நான் இங்க இருக்க விரும்பவி்ல்ல. என்னை போக விடுங்க..வாசல் தாண்டி தன் சயிக்கிளை எடுத்து மிதித்துக்கொண்டு நண்பரை தேடிச்சென்றான் சாரங்கன்.அதுவரை பேசாமல் இருந்த கோமதி...சாரங்கன்...உங்க அப்பா மனசை நோகடிச்சிட்டீங்களே...இல்ல கோமதி.....அப்படி இல்ல. நாங்க அவர் கூட இருந்தால் நானும் வேறு நல்ல வேலை தேட மனசு வராது. அவருக்குச் சுமையாக நானிருக்க விரும்பல்ல. இப்ப குடும்பம் உள்ள சூழ்நிலை எனக்கு நன்றாகத்தெரியும். நான் இதை எடுத்துச் சொன்னாலும் என் அப்பா மனசு தங்கம், வீட்டை விட்டு வெளிய போக விடமாட்டார். நான் எங்கிருந்தாலும் அவங்களை பார்க்கிற கடமையுடன் தான் செயல்படுவேன்.அப்பாவின் ஆறுதலுக்காக சாரங்கன் தங்கை ஜானு..அப்பா அண்ணா பாவம் அப்பா......ஏன் அண்ணா எங்களை விட்டு போனாராப்பா. அம்மா பேசிட்டா என்றுதானே..இல்லம்மா அவன் அப்படிபட்டவனில்ல. ரொம்ப நல்லவன். நாங்க கஸ்டத்தின்மேல் துன்பப்படக்கூடாது என்றுதான் அவன் இந்த முடிவுக்கு வந்தான். தன்னால யாருக்கும் எந்த கெடுதலும் வரக்கூடாது என்ற எண்ணத்திலதான் போயிருக்கான். அப்பா, மகன் புரிந்துணர்வு உணர்ந்து சந்தோசப்பட்டாள் ஜானுவும், அவள் அம்மாவும்...

ஆக்கம்: தனிமதி www.nilafm.com

Sunday, April 27, 2008

ஊருக்கு உபதேசம்...

வழமைபோல் காயத்திரியும், அவள் படிக்கும் பாடசாலை அதிபராக அவள் தாயாருமாகிய கமலாதேவியும், காலை 7.45 மணிக்கு பாடசாலையை நோக்கி காரில் புறப்பட்டார்கள்.பாடசாலை அதிபர் என்றபடியாலோ என்னவோ, காயத்திரிக்கு வீட்டிலும், பாடசாலையிலும் சுதந்திரம் என்பது சுவாசிக்ககூட முடியாத அளவிற்கு கட்டுப்பாடாகவே இருந்தது.இத்தனைக்கும் அவள் சிறுபிள்ளை இல்லை. ஆண்டு 11 வது படிக்கும் மாணவி. வகுப்பிலும் சரி, வேறு எந்த துறையிலும் அவளின் திறமைகளை அறியாதவர் எவருமில்லை. இதற்குக் காரணம் அவள் பெற்றோர்களே என்று பலராலும் பெருமையாக பேசப்பட்டு வந்தாள் காயத்திரி.அன்று பாடசாலையில் ஆண்டுவிழா. வருடாவருடம் இந்த ஆண்டுவிழாவில், அதிபர் கமலாதேவியும் ஏதாவது ஒன்றைப்பற்றி அழுத்தமாக ஆணித்தரமாக பேசுவது வழக்கம். அன்றும் அதிபர் கமலாதேவி " சாதிகள் என்றில்லை, சவால்களாக பேசுவோம்" என்ற தலைப்பில் தனது பேச்சை தொடங்கி அனைவரும் மெய்மறக்கும் வண்ணம் பேசினார்.சபையோர் யாவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். சில நிமிஷங்களுக்கு கைதட்டியோர் கரங்கள் ஓயவில்லை. பாராட்டு என்றால் அப்படிப்பாராட்டுக்கள். அந்த சந்தோசத்தில் அனைவருக்கும் வணக்கம் கூறி மேடையை விட்டு இறங்கி வந்தார் அதிபர் கமலாதேவி. ஓடோடி வந்த இளையதலைமுறை மாஸ்டர் சஞ்ஜீவ், கைகூப்பி தன் பாராட்டைத்தெரிவித்தார்.அவரைத்தொடர்ந்து அனைத்து ஆசிரியர்களும் அதிபருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது உணர்ந்து கொண்டார்.அடடா தன்கருத்தை எவ்வளவு அருமையாகச் செவிமடுத்துக்கொண்டார்கள் என்று.நாட்கள் மாதங்களாகி. வருடங்களாகின. காயத்திரியும் அதே பாடசாலையில் தற்காலிக ஆசிரியை ஆனாள். அன்று ஒருநாள் அதிபரின் வருகைக்காக காத்திருந்து, சஞ்ஜீவ் மாஸ்டர், தயவாகக் கேட்டார். " உங்களுடன் பேர்ஷனலாக ஒருவிசயம் கதைக்கவேணும். அதற்கான நேரத்தை எனக்குத்தருவீங்களா " என்று." ஓ...யெஸ்...நீங்க விரும்பினா இப்பவே சொல்லுங்கோ..."மீண்டும் தயவாய் சொன்னார் மாஸ்டர்.." நான் உங்க மகளை சில மாதங்களாக விரும்புகிறேன்.' நாங்கள்......."ஸ்டொப்...., இஞ்ச பாருங்கோ, நீங்கள் வேறஜாதிக்காறங்க.... நாங்க வேற ஜாதி. இந்தக்காலத்தில யார் இதைப் பார்ப்பாங்க என்று நீங்க நினைக்கலாம். ஆனா நானும் என்ற இனம் சனங்களோட தலைநிமிர்ந்து வாழனும். காறிதுப்புற அளவிற்கு நான் நடக்கமாட்டேன். அதனால நீங்க அவளை மறந்திடுங்க.....என் மானத்தை காப்பாற்றுங்க." கையெடுத்து கும்பிட்டு கேட்டார் கமலாதேவி.மறுபேச்சு எதுவுமின்றி விடைகொடுத்தார் மாஸ்டர் சஞ்ஜீவ்.அம்மா ஒரு நிமிஷம், நீங்க இந்த பாடசாலையில் வைத்து சொல்லுகிற ஒவ்வொரு அறிவுரைகளையும் ஏற்று சிறுவயது முதல் அதன்படி நடந்தவள் நான். மகளாகி, மாணவியாக. அதே போல நீங்க சொன்ன அதே அட்வைஸ்தான் " சாதிகள் பற்றி" நீங்க தந்த விரிவான கருத்து என்னையும் உள்வாங்கியது. அந்த நேரத்தில கம்பஸ் முடித்து வந்த சஞ்ஜீவும், என்மீது தன்காதலைச்சொல்ல அதனை நிச்சயம் நீங்களும் ஏற்பீங்கள் என்ற நம்பிக்கையில அன்பை வளர்த்தேன். இப்பவும் சொல்லுறன் நீங்க சொல்லுகிற அறிவுரையைத்தான் நானும் கேட்டு நடக்கிறேன்.எப்ப உங்க மனம் என்னை ஏற்கிறதோ அப்போது வரவேற்றுக்கொள்ளுங்கள் எங்கள் இருவரையும்.உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான். அம்மாவிற்கு அறிவுரை சொல்லி விடைபெற்றாள் காயத்திரி.

ஆக்கம் : தனிமதி

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி