Friday, December 5, 2008

மனசாட்சி.....8

உச்சி வெய்யில் உடலைத்தாக்க, உள் மனதோ அவனைத்தாக்க கண்கள் கலங்கி கண்ணீர் கன்னம் வரை வழிந்தோட..ஏதும் அறியாத கோபால்......போகும் பாதையில் குறுக்காகப்போகும் ஆட்களுக்கும், ஐந்தறிவு ஜீவன்களுக்கும்......டிங்..டிங்டிங்...என்று வாயினால் ஒலி எழுப்பி பெல்சத்தம் போடவும்......தாகம் எடுக்க வீதியோரத்தே இருந்த தண்ணீர்க் குழாயைக் கண்டவுடன் சயிக்கிளால் மெல்ல இறங்கி.......கோபாலிடம் சயிக்கிளைக்கொடுத்துவிட்டு நிரைய நீர் அருந்தினான் மாயாவி.

அப்பா எனக்கும் தண்ணீர் விடாய்க்குதப்பா.......சொன்னவன் சயிக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு வலக்கை விரல்களை ஒன்றாகக் குவித்து வழிந்தோடும் தண்ணிரைப் பருகினான்....கோபால்.

கழுத்தில் போட்டிருந்த மெல்லிய துண்டை குழாய்தண்ணியில் நனைத்து அதனைப்பிழிந்து முகத்தைதுடைத்து கண்ணீரைக்கழுவினான் மாயாவி....அப்போது மகனை ஏறிட்டு பரிதாபமாகப்பார்த்தான்......மீண்டும் அவன் கண்கள் கலங்க ஆரம்பித்தது. மீண்டும் மகனையும் ஏற்றிச்சென்று அருகிலிருந்த பாட்டா கடைஒன்றிற்கு அருகில் நிறுத்தி.....கோபாலுவோடு அக்டையின் உட்சென்றான்....

அங்கே மகனுக்கு கால்செருப்பு ஒன்று எடுத்துத்தரும்படி விற்பனையாளரிடம் கூற , அவ்வாறே அவனுக்கு அளவாக..பாட்டா செருப்பு அவனுக்குப்பிடித்த நீலநிறத்தில் எடுத்துக்கொடுக்க....உள்ளம் பூரிப்படைந்து துள்ளிக்கொண்டிருந்தான் கோபால்....அளவான செருப்பு கிடைத்துவிட்டது. விலை ரூபா 99.99 சதமாகயிருக்க....மகேஸ்வரி அம்மா கொடுத்த அந்த 100 ரூபாய்தாளை கொடுத்துஅதனைப்பெற்றுக்கொண்டான்.பழைய செருப்பை கையில் எடுத்துக்கொண்டு மகனை மீண்டும் ஏற வைத்துக்கொண்டு ஹொஸ்பிட்டல் நோக்கிச் சென்றான்...மாயாவி.

அப்பா எதுகப்பா.....எனக்கு புதுசு பாட்டா...(செருப்பு)...அம்மா எப்பவும்... வேண்டேக்க கொஞ்சம் பெரிசாத்தான் எடுத்துதருவா.அப்பத்தான் வளரவளர போடலாம் என்று......ஆனா இது எனக்கு நல்லம்....எதுக்கப்பா....? நாளைக்கு ஸ்கூலுக்கு போறனா...? அப்...பா......என சயிக்கிள் கான்டிலை அங்குமிங்கும் ஆட்டினான் முன்னுக்கு இருந்தபடி கோபால்...

டேய்.....சும்மாயிருடா....அந்தச்செருப்பு பழசாகிப்போயிட்டுதா......அதுதான்டா எடுத்தேன்..உனக்கு வேணாம்னா சொல்லு கடையில கொடுத்திரலாம்.......

இல்லப்பா......வேணும் எனக்கு....என்று கீழே குனிந்து கால் செருப்பைப் பார்த்துகொண்டான்...சிரித்தான்.....பின்பு கவலையடைந்தான்.......எதுவுமே பேசாது இருந்தான்.....எந்நேரமும் வாய் வலிக்காது பேசிக்கொண்டிருக்கும் கோபால் அமைதியாக இருப்பதை எண்ணி மாயாவி பேச்சுக்கொடுத்தான்.....

என்னப்பா சத்தத்தைக்காணோம்....

ம்.....அப்பா....என்னோட விளையாட வருவாங்களே ரகு, காந்தன்.......அவங்க ஒரே என் செருப்பை எடுத்து ஒளிச்சு வைப்பாங்கப்பா........அதுதான் அவங்களுக்கு காட்டவேணும் என்று யோசிக்கிறன்.....எப்ப காட்டவேன் என்றிருக்ப்பா....அதுதான் இப்ப கவலை....

சிரிக்கிறான் மாயாவி.....ம்.......அம்மாவைப் பார்க்கப்போறோம் ஆஸ்பத்திரி வந்திட்டுது இறங்கப்பா......அங்க சத்தம் ஒன்னும் போடாதே என்ன பேசாம வா....சத்தம் போட்டா வெளியில துரத்திவிடுவாங்க...

இல்லப்பா.......இப்ப விசிட்டர்ஸ் நேரம்தானே.....நாங்க சத்தம் போடலாம்.....

இல்லடா......மற்றாக்களுக்கு தொந்தரவாகிப்போடும்.....அதுதான் பேசாம வா..

ம்...என்றவன்....அடிக்கடி தன் செருப்பைக்குனிந்து பார்த்துக்கொண்டான்....பின்னால் திரும்பியும் அதன் அழகைப் பார்க்கிறான்....டக்கென்று நின்றுவிட்டு ஒரு கையில ஒரு செருப்பைமட்டும் எடுத்து அதன் பின்பக்கம் திருப்பி ஊத்தை படிந்துவிட்டதா என பார்த்தான்..வாயால் ஊ.ஊ என்று ஊதிவிட்ட மீண்டும் காலில் மாட்டுகிறான்...

கோபாலுவின் இந்தச்செய்கை மாயாவிக்கு சிரிப்பை உண்டுபண்ணியது.......சிரித்துக்கொண்டு சொல்லுகிறான்....இது பழுதாய்ப்போனா உனக்கு அப்பா புதுசு வாங்கி தருவேன்....இப்ப வாடா......

கோபாலும் சிரித்துக்கொண்டு போகிறான்......அதோ தெரிகிறது அம்மாவின் வார்ட்டு....கிட்ட வந்தவுடன் ஓடிப்போகிறான்.....போனவன் அங்கிருந்து அப்பாவைப்பார்க்கிறான்...

வாப்பா.....கெதியா வாங்க.....

அமைதியான தூக்கம்....மங்கா.

ஒருதடவை அவளை எட்டத்தில் நின்றே பார்த்த மாயாவியின் கண்கள்....அந்த வார்ட்டில் அட்மிட்டாகயிருந்த அந்த 3 பிள்ளைகளின் தாய் இருந்த இடத்தைப்பார்க்கிறான்.......அங்கே அவள் கணவனுடன் வீட்டிற்குச்செல்ல தயாரிக்கொண்டிருந்தார் மாயாவி....கொஞ்சம் இரண்டடி முன்னுக்கு நடந்தவனாய்.....ஐ...யா.....ஐயா......

என்னங்க உங்களத்தான் அந்தஆள் கூப்பிடுகிறார் போல.....போய் என்னென்டு கேட்டிட்டு வாங்க...

அட ஆமா....ஏதும் உதவி கேட்கப்போறோனோ தெரியல்ல...பாவம் அவனும், அந்தப்பெடியனும் ........என்று கூறிக்கொண்டு அவன் அருகில் சென்றார் அந்தப்பெரியமனிதர்.....

ஈஸ்வரா........இஞ்சவாப்பா.....அழைத்த குரல் கேட்டுத் திரும்பி பார்த்தார் அந்தப்பெரிய மனிதர் ஈஸ்வரன்..என்னம்மா என மெதுவாக 4 விரல்களை உள்மடக்கி பெருவிரலை மட்டும் உயர்த்திக் கேட்டார் ஈஸ்வரன்...

அட இஞ்ச வாப்பா.......கிட்ட வா....ம்.என்றபடி மாயாவியைத்திரும்பிப் பார்க்க...மாயாவி....போங்கய்யா போயிட்டு வாங்க..பெரியம்மா கூப்பிடுறாங்க.....நான் இங்க நிற்கிறன்......போயி பேசிட்டு வாங்கய்யா....

ம்........இருங்க வாறன்.....

என்னம்மா இவ்வளவு நேரமும் இங்கதானே நின்றனான்..........இப்பபோய் கூப்பிடிறீங்களே.......

அட அவசரப்படாதேயடா என்று மெதுவாக அவர் காதருகில் ஏதோ கூறினார் ஈஸ்வரனின் தாயார்.....அதனைக்கேட்ட ஈஸ்வரனின் மனைவி வாசுகியும் மெல்லச்சரித்துக்கொண்டாள்....தூரத்தே நின்று எதுவும் புரியாது மனது ஒருநிலையில்லாது தவித்துக்கொண்டிருந்தான் மாயாவி......

மீண்டும் ஈஸ்வரன் மாயாவி பக்கம்......ம்.சொல்லுங்க.....ஏதாவது உதவி வேணுமா...? இப்ப உங்க மனைவிக்கு எப்படியிருக்கு...? வேறு யாருமே உதவிக்கில்லையா......?

ஒரு தடவை.....மகனைத்திரும்பி பார்த்துவிட்டு மீண்டும் அழுதான் மாயாவி....

அடடா ஏன் அழுகிறீங்க.....சொல்லுங்க....நான் ஏதும் உதவி பண்ணனுமா....? இனி நாங்க வரமாட்டோம்......இன்னைக்கு ராத்திரியே நம்ம ஊருக்கு இரத்தினபுரிக்குப்போகிறோம்......இனி உங்கள காணமாட்டோம்......கடவுளை நாங்க குடும்பமா வேண்டிக்கிறோம்.....இப்ப என்ன உதவி நான் செய்ய வேண்டும் என்று சொல்லுங்க.....கார் வரப்போகுது.........சொல்லிக்கொண்டிருக்கும் போதே....அவருடைய 3 சின்னப்பிள்ளைகளும் அப்பா என்று ஓடி வந்து கையையும் காலையும் கட்டிப்பிடித்தார்கள்......அவர்களோடு கார் டிறைவரும் கூட வந்தார்....

நீங்க சொல்லுங்க....

ஐயா....ஐயா......என்று தோளில போட்டிருந்த துண்டை எடுத்து வாயி்ற்கு கிட்ட வைத்து அழுதான்.தேம்பித்தேம்பி அழுதான் மாயாவி.....அவன் அழுவதைக்கண்டவுடன் கோபால் ஓடி வந்து அப்பா அப்பா என அவனை தட்டித்தட்டி கூப்பிட்டான்.....ஏனப்பா அழுவுறீங்க...

ஐயா.....எனக்கு இவன் ஒரேயொரு பையன்.....அன்னைக்கு அந்த அம்மா கட்டிலுக்கிட்ட இவன் நின்னுட்டு இருந்தப்போ.....அந்தம்மா சொன்னாங்க..............உங்க....ளுக்கு....உதவிக்கு வீட்டு வேலைக்கு சின்னப்பையன் வேணும் என்னு.....

அட ஆமா..ஆமா.....இப்ப கூட என் அம்மா கூப்பிட்டு அதைத்தான் சொன்னாங்க.....ஆமா அதுக்கு...

ஐயா......இவனை கூட்டிட்டுப்போங்கய்யா.....அவன் நல்லா கணக்கு எல்லாம் செய்வான்.....சயிக்கிள் எல்லாம் ஓட்டுவான்......ரொம்ப நல்ல பையன்.......எங்க விளையாடப்போனாலும்..வூட்டுக்கு டைமுக்கு வந்துவானய்யா......என்னோட கடையில கூட வேலை செய்தபழக்கமிருக்கய்யா....ஐயா....என விக்கி விக்கிஅழுதான்...

ஓ......அப்படியா...நாடியில் கைவைத்தார் ஈஸ்வரன்....யோசித்துவிட்டு கோபாலைப்பார்த்தார்.....அவருடைய பிள்ளைகள் அவர்கள் அம்மா இருந்த இடம் போக திரும்பிப்பார்க்கிறார்......இஞ்ச வாப்பா என்று கூப்பிட்டார்....கோபாலை.....

அவனோ.....எல்லாம் புரியாதுவிட்டாலும்....தன்னை தன் அப்பா மாயாவி யாருக்கோ தள்ளிவிடப்போகிறார் என்று மட்டும் உணர்ந்துகொண்டவனாய்...வேணாப்பா......நான் போகமாட்டேன்.....நா மாட்டேன்.....என்று மாயாவியின் கால்களை இறுக்கிப்பிடித்துக்கொண்டு தலையாட்டினான்......

ஈஸ்வரனோ......மாறிமாறி இருவரையும் பார்க்கிறார்.....பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களைக்கடந்து பிள்ளைகளும், தாயும், ஈஸ்வரனின் அம்மாவும், டிறைவர் கைகளில் பைகளையும் எடுத்துக்கொண்டு போகிறார்கள்......அப்போது அங்கே வந்த ஈஸ்வரனின் தாயார்......என்னவாம்... என்று கேட்க.....ஈஸ்வரனும் விசயத்தைச்சொல்ல மறுபேச்சுக்கிடமின்றி....அட நல்லதாகிப்போச்சு.....ம்ம்....கூட்டிக்கொண்டு வாற வழியைப்பாரு என்றுவிட்டு முதலில் பேசிக்கொண்டிருக்காம காசைக்கையில வை என்று மெதுவாக மகனிடம் கூறிவிட்டு அவ்விடததை விட்டு நகர்ந்தார்கள்....

கோபால் இந்த ஐயாகூட போங்க ..அப்பா வந்து கூட்டிவருவேன்......என்று மாயாவி சொல்ல.

அவனோ......

வேணாம்ப்பா நான் போகமாட்டேன்......நான் ஒருஇடமும் போகமாட்டேன்....எனக்கு அம்மாவும், நீங்களும் வேணும் யாரும் வேண்டாம் வேணாப்பா......என்னை விடுங்க நான் போகல்ல........நான் ஒண்ணுமே இனி கேட்கமாட்டேன் விளையாடப்போகமாட்டேன்..அடம்பிடிச்சு கத்தமாட்டேன்......என்னை அவங்ககூட அனுப்பாதிங்கப்பா...அப்பா...நான் போகல்ல......எனக்கு நீங்கதான் வேணும்....ப்பா.......அம்மா........அம்.........அம்மா.......

அழுதான்......பணக்கஷ்டத்தின் கொடுமையில் தவிக்கும் மாயாவி......மகனை அடக்கு வைக்கத்துணிந்தான்.....அவன் எடுத்த எந்த முயற்சியும் அவனுக்கு இடமளிக்கவில்லை.....ஏழையின் பாரம் இறங்க......இறைவன் வழிவகுக்கவில்லை.....எதற்கும் ஆசைப்படாத மனசு இன்று காலத்தின் கொடுமையில் ஒரு உயிரை விலைபேசுகிறது.....பார்ப்போர் நெஞ்சை உருக்கி கசக்கிப்பிழியும் காட்சியது.....இனி தாமத்தால் எங்கே கைநழுவிப்போய் விடுமோ என சிந்தித்தவாறு ஈஸ்வரன்......மடமடவென பொக்கட்டினுள் கையை விட்டு ரூபா.......1500.00 எடுத்து மாயாவியின் கைகளில் வைத்தான்..
மாசாமாசம் உங்களுக்கு பணம் கிடைக்க வழி பண்ணுறன்........உங்க வீட்டு விலாசம்....

பையனுக்குத் தெரியுமய்யா....என ஐயா என.....பணத்தையும் வாங்கிக்கொண்டு காலில் விழுக்கிறான்.....,ஈஸ்வரனின் பாதங்களை கண்ணீர் கொண்டு கழுவுகிறான்.....

மாயாவியைத் தொடமலே எழும்புங்க.இது என்ன வேலை.......எழும்புங்க.....சொல்லுறன்.எழும்புகிறான்.....மாயாவி அழுகிறான்...

கோபாலோ... நிலத்திலே குந்தியிருந்து கண்களைப்பொத்திக்கொண்டு அழுகிறான்....அவன் மனசுக்கு கடவுளை எல்லாம் கேள்வி கேட்த்தெரியவில்லை...அம்மா....அம்மா என்று மட்டுமே திரும்பத்திரும்பத் சொல்லி அழுதான்....

மாயாவி அவன் தோள்களைப்பிடித்து தூக்கிஎழும்பவைத்தான்......அவன் மூக்கால் வழியும் மூக்கு நீரை தன் தோள் துண்டுகொண்டு துடைத்துவிட்டு.......என்ர ராசா........கோபாலு....இந்த ஐயா ரொம்ப நல்லவரய்யா.....உன்னை நல்லா வச்சு பார்ப்பாங்க.இப்ப அம்மாக்கு உடம்பக்கு முடியல்ல....வாற மாசம் உன்னை இங்க கூட்டிவருவேன்.ஒவ்வொரு மாசமும் நான் கூட்டிவருவேனப்பா.......அழுவாதேடா...

அழுகிறான்.....போ.....என்னோட பேசாதிங்க.....என்.அம்.மா...அம்மா வேணும்.......நீங்க நல்லமில்ல போங்கோ...எனறு அப்பாவை தள்ளிவிட்டு மீண்டும் முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதான்.....அந்த இடத்தில இருந்தால் எங்கே மனம் மாறிவிடுமோ என எண்ணியவாறு ஈஸ்வரனும் கோபாலை கையால் கிட்டப்போய் தொட்டு அவன் ஒரு கையை பிடித்தார்......நிமிர்ந்து பார்த்தான்...ஈஸ்வரனின் பிடியில் கை தளர்த்திக்கொண்டு மீண்டும் மாயாவிடம் அப்.....பா நான் போகமாட்டேன்......அவங்கள போகச்சொல்லுங்க....நான் போக மாட்டேன்....

இரு மனங்களின் வேதனைகள்.......உடல் மட்டுமிருக்க உயிருக்காகப்போராடும் இன்னுமொரு அவலநிலையில் மங்கா.....இவர்களுக்கடையில் தேடிவந்த வேலை சுலபமாகிவிட்டநினைப்பில் ஈஸ்வரன்......

இனியும் தாமதித்தால் நல்லதல்ல என்றபடி....வேறு என்ன..இந்தாப்பா இதுதான் என்னோட அட்ரஸ்......இரத்தினபுரியில கடை வச்சிருக்கேன்....வீட்டு வேலைக்கு கடைக்கு அங்க இங்க போக கை உதவிக்கு ஒரு பையன் தேவை என்றிருந்தேன்......சரி என்ன செய்வது.......கடவுள் எல்லோருக்கும் ஒரே மாதிரி அளந்துவைக்கல்லையே.....

சரி நான் இவனையும் கூட்டிட்டுப்போறன்.......

இந்தாங்கய்யா.....இதில அவனோட உடுப்புகளிருக்கய்யா....நான் பணம் சேர்ந்ததும் பையனை கூட்டிவரவருவேனய்யா......

சரி அதை அவனிட்டையே குடப்பா.......சாமியை வேண்டிக்கிறன்.....அவங்க அம்மா சுகம்பெற....

அழுதான் கோபால்.....அம்.மா.அம்மாவைப்பார்க்கவேணும்......யாருமே அவன் பேச்சுக்கு இடமளிக்கவில்லை.மனமிரங்கவில்லை.......மாயாவி பாவம் என்ன செய்வான்.....அழுகிறான்.ஐயோ.....நான் பாவம் செய்கிறேனே என்று அழுதான்.......மகனை கட்டிப்பிடித்து கண்களைத் துடைத்துவிட்டு முத்தமிடுகிறான்...தலையைத்தடவிவிடுகிறான்...மீண்டும் ஈஸ்வரன் கையில கொடுக்கிறான் கோபாலை...மயாவி.

தொடரும்....
----------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

www.thamilworld.com