Monday, April 28, 2008

பாலகனின் பார்வை..

குடும்பம் ஒரு கோவிலாக, எல்லா குடும்பத்தாலும் வாழ முடிவதில்லை. அப்படி கோவிலாக வாழும் குடும்பத்தில் சந்தோசம் என்பது, நிலைத்திருப்பதில்லை. அப்படி தான் இந்தக்குடும்பத்திலும்.அம்மா அப்பாவிற்கு 3 பிள்ளைகள் அதில் ஹென்றி, 3வதாக பிறந்த 4 வயதுச்சிறுவன். படிப்பிலும் சரி, விளையாட்டுத்துறையிலும் சரி பேச்சிலும், மிகச்சிறந்த பையன் ஹென்றி. யாராவது அவனைப்பார்த்தால் காணும், இரண்டு வார்த்தை கதை கேட்காமல் போகமாட்டார்கள். அந்தளவிற்கு, பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும் சுட்டித்தனமான துரு துரு வென்ற கண்கள். ஹென்றி தினமும், தன் வீட்டிக்கு அருகாமையில் இருக்கும் வீட்டு பிள்ளைகளோடு மகிழ்ந்தே விளையாடுவான். அவன் விளையாட வருவது, ஒரு தமிழ்குடும்ப பிள்ளைகளோடு தான். தினமும் வரும் ஹென்றி, ஓரிரு நாட்களாகவே விளையாட வரவில்லை என்று, அந்தத் குடும்பத்திடம் சென்று விசாரித்தனர், இந்ததமிழ் குடும்பத்தினர்.அப்போது மிகவும் கவலை தரும் சம்பவத்தை கேட்கநேரிட்டது. ஆம் அந்த 4 வயதுச்சிறுவன் ஹென்றிக்கு, கண்ணிலே கான்சர் நோய். இதனால் ஒரு கண்ணை வைத்தியர்கள் அகற்றினார்கள். இத்துயர் நடைபெற்று பெற்றவர்களோடு அத்தனையுள்ளங்களும் சேர்ந்து துயரத்தில் இருக்க மற்றுமொரு அதிர்ச்சி. ஹென்றியின் மற்றைய கண்ணையும் அந் நோய் தாவிவிட்டது. இதனால் அந்த கண்ணையும் அகற்ற வேண்டும் என வைத்தியர்கள் கூறவே இச்செய்தியறிந்து பெற்றவள் மயங்கி விழுந்தாள். ஒரு கண்ணால் தன் தாயை பார்க்க வேண்டும் என அழுதான் ஹென்றி. தாயும் மகனுடன் இருக்க. வைத்தியர்களிடம், ஹென்றியுடன் படிக்கும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் அந்தச்சிறுவனுக்கு கண் தானமாக கொடுக்க முன் வந்தனர்கள் பலர். ஆனால் எதுவுமே பயனளிக்கவில்லை. ஹென்றியின் பார்வை நரம்புகள் அடீயோடு செயலற்றுப் போய்விட்டதாக வைத்தியர்கள் சொன்னார்கள்.நாளாந்தம் கூட்டம் கூட்டமாக ஹென்றி தங்கியிருக்கும் வைத்தியசாலையை ஆயிரக்கணக்கானோர் சென்று ஹென்றியுடன் படம் எடுப்பதும், ஹென்றியின் விருப்பத்தை பூர்த்தி செய்வதுமாக அலையலையாய் திரளாய் மக்கள். இதில் இந்த தமிழ் குடும்பமும் அடங்குவர்.மறு நாள் கண்அகற்றப்படும் நாள். முதல் நாள் ஹென்றியிடம் கேட்டனர், ஹென்றி, உங்களுக்கு என்ன பார்க்க ஆசையாகவுள்ளது ? எனக்கேட்டனர். அதற்கு தன் அம்மா தன்னோடு தான் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றான். அடுத்து தன் அப்பாவும் மற்றைய 2 சகோதரர்களோடும் நிறைய பார்க்க வேண்டும் என்றானாம். அவனை படிப்பித்த ஆசிரியர்கள் வரவே , அவர்கள் மூலம், கடைசியாக படிக்கவேண்டும் என்று ஆசைப்படவே, அதற்கான ஒழுங்குகள் வைத்தியசாலையில் ஏற்பாடு செய்தனர்கள். ஹென்றிக்கு கிரிகெட் என்றால் நல்ல விருப்பம். இதனால் அவர்களையும் பார்க்க விரும்பி, அவுஸ்திரேலியா கிரிகட் விளையாட்டு வீரர்கள் வைத்தியசாலை சென்று ஹென்றியின் ஆசையைகண்ணீரோடு பூர்த்திசெய்தனர்.இரண்டு கண்களையும் இழந்து அந்தச்சிறுவன். இன்னும் மகிழ்ச்சியாக வாழ்கிறான். தனக்கு இனி கண் பார்வை வராது என்று தெரியாமல், வரும் என்ற நம்பிக்கையோடு.

இந்தச்சம்பவம், அவுஸ்திரேலியாவில் இருக்கும் என் தங்கை, மனவேதனையுடன் தொலைபேசியில் கூறியதை, கதையாக வடித்துள்ளேன். அந்தச்சிறுவனின் வாழ்க்கைக்கு இறைவன் துணைபுரிய வேண்டுகிறேன்.
--------------------
கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...நிலாவில் உலாவரும் தனிமதி

www.nilafm.com

No comments: