Monday, July 14, 2008

மனசாட்சி.....5

ஏழையின் மனவானிலே ஓலைக்குடிசையும், எதிர்பார்ப்புக்கனவுகளுமே உலகம், இதில் மாயாவி மட்டும் விதிவிலக்கா என்ன....?
கந்தவர்மன் வருமட்டும் அவர் வீட்டு வாசலில் தவமாய்க் கிடந்தான்.அவரும் சாயந்தரம் வேலைவிட்டு வீட்டுக்கும் வரும் போது தூரத்தே கண்டுகொண்டார் அங்கே நிற்பது மாயாவிதான் என்று.....

வரும் போது கந்தவர்மன் வாங்கி வந்த காய்கறிகளை ஒருபக்கமாக எடுத்து மாயாவிடம் கொடுத்து அம்மாட்ட கொடு என்று கண்ணால ஜாடை செய்தார்...பின்பு மாயாவியைப்பார்த்து...

என்ன இந்தப்பக்கம் மாயாவி....? அம்மா ஏதும் வரச்சொன்னாங்களோ....ஏதும்வேலை வெட்டி பார்தனியோ.

இல்லைங்கய்யா...

அப்ப ஏனப்பா இந்த கொடிய வெயிலில கருவாடுபோல காய்ஞ்சு நிற்கிறாய்...?

ஐயா அது வந்துங்க...ஐயா...அது...

ம்.நீ விசயத்தைச் சொல்லுறதுக்குள்ள....பொழுது விடிந்திடும்...போ..போ.போயிட்டு நாளைக்கு வாவா.... என்னான்னு பார்க்கலாம்...சரியோ..

ஐயா.வந்துங்க........

அட என்னடா நீ வந்து போயி....முட்டாள் மாதிரி பேசுறாய்...எப்பத்தான் நிறுத்தப்போறீயோ..சரி சரி ரூபவாஹினி செய்தி ( இலங்கையின் தொலைக்காட்சிப்பிபிரிவில் ஒன்று ) தமிழ் செய்தி தொடங்கப்போகுது நீ போயிட்டு நாளைக்கு வா என்ன.....

சரியிங்க ஐயா.....

வந்தவன் மனதில, உள்ள பாரச்சுமைகளை இறக்கி வைத்து உதவி கேட்க நினைத்தவன் யாவுமே கை கூடாமல் விடைபெற்றுச் சென்றான் அவன்..இனி எங்க போவது...? யாரைக்கேட்பது...? மீண்டும் அரச வைத்தியசாலைநோக்கிச் சென்றான். எப்படியும் மருந்துவேண்டிக் கொண்டு வருவான் என்ற நினைப்பில் அந்த இடத்தில் வேறு ஒரு தாதி..( நேர்ஸ்)

அடடே வாங்க....இந்த அம்மா புருஷனா....

ஆமாங்க....

றிப்போர்ட்டில 3 இன்ஜெக்ஸன் போட எழுதியிருக்கே.....வாங்கி வந்திருக்கிறீங்களா.....

இல்லைங்க.......அது போடலைன்னா என்னாகுமுங்க.....

அப்ப வாங்கலையா....? ம்......அது போடலைன்னா உயிராபத்து..

ஐயோ..அப்படீங்களா.....

மீண்டும் மங்கா பக்கம் சென்றான்.....இன்று மங்காவிற்கு நெட்போட்டு அவ இருந்த இடத்தை தனியாக வைத்திருந்தார்கள்....மாயாவியும் மங்கா அருகில் செல்ல அதற்குரிய பாதுகாப்பாக வாய்க்கு பாதுகாப்பு மூடியும், கையுறையும் கொடுத்து அணியும்படி தாதி சொல்ல அதன்படி அவனும் எல்லாம் போட்டவாறு அவளருகே சென்று பார்த்தான். அவள் முகம் வாடியிருந்தது......கண்கள் சிவந்திருந்தது. அவள் உதடும் கறுத்து படைபடையாக தோல் உரிந்ததுபோலவும், உடலும் உருக்குலைந்து மெலிந்தும் காணப்பட்டாள். அவனால் பேசக்கூட முடியவில்லை. ஆறுதலாக இரண்டு வார்த்தை பேச ஆசைப்பட்டான் ஆனாலும் முடியவில்லை. அவன் கண்கள் உருண்டு கண்ணீர் முத்து முத்தாக கொட்டியது.....தலையைத்தடவி விட்டபடி.....நெட்டைத்திறந்து வெளியே போகத் திரும்பியவன் அவன் டீ சேர்ட்டை இழுத்துப்பிடிப்பதை உணர்ந்து திரும்பினான்.....மங்காவின் கைபிடியில் அவன் சேர்ட்.....

மீண்டும் என்னம்மா என்றது போல கேட்டான்......அவள் கையை பதித்துக்காட்டி தன்மகன் எங்கே என்றாள்...?

ஓ.....கோபாலுவா.....,?

மெதுவாகத்தலையை மேலும் கீழுமாக ஆட்டி ஆம் என்றாள்....கண்கள் கலங்க..

அவன் விளையாடப்போயிருக்கான்.....நாளைக்கு கூட்டியாறன்....என்று சொன்னான்...

பிள்ள சாப்பிட்டானா....?

ம்...சாப்பிட்டான்...

நீங்க.....

ம்....சாப்பிட்டேன்...நீ எதுக்கும் கவலைப்படாதே என்ன......நான் போயிட்டு நாளைக் காலைல கோபாலோட வாறன் சரியா.......என்று மீண்டும் அவள் தலையைத்தடவி விட்டு அவள் போர்வையை சரியாக போர்த்து பக்கவாட்டில் சொருகிவிட்டு.....கலங்கிய கண்களோடு அவ்விடத்தை விட்டு அகன்றான்...

அவனுக்கு என்ன செய்வது யாரைக்கேட்பது எதுவுமே புரியவில்லை. அவன் வரும்போது மகனுக்கு கடையில் இடியப்பமும் சம்பலும் வேண்டிக்கொண்டு தன் ஓலைக்குடிசைக்கு வந்தான் மாயாவி....வரும் போதே....

என்னாலு மாயாவி....இப்பல்லாம் உன்ன காணக்கிடைக்கல்ல.....என்றான் அந்த தெருவில இருக்கும் வசதியற்றோர் வாழ்வில் கறுப்பன் என்கிற இவன்.

நானு ஆசுப்பத்திரியில மங்காவை வச்சிருக்கன் போயி பாத்துட்டு வந்தனா....

ஓ......என்னாச்சு மங்காக்கு...? நம்மாக்களுக்கு தெரியாதாக்கும்......

சும்மா காச்சல்தான்.சரியாப்போடும்....

அட அப்படியா......ஆமா நான் போத்தல்கடைபக்கம் போகவேணும், என்கூட வாறீயா....

அவனுக்கும் கறுப்பன்கூட போய் பழங்கள்ளு குடிச்சால்தான் தன் கவலைகளுக்கு நல்லம் எனத்தோன்றியது. அதனால..உடனே வாறன் நானும்....கோபாலுக்கு சாப்பிடக்கொடுத்துட்டு இதோ வந்திடிறன் என்று கூறிக்கொண்டு.....மகனைக்கூப்பிட்டு பார்த்தான்...அவன் அங்கிட்டு வச்சிட்டுப்போங்கப்பா.இப்ப வரமுடியாது என்று விளையாட்டின் ஆர்வத்தால சொன்னான்.

சரிப்பா..அப்பா வர நேரமாச்சா......நீ பயப்பிடாதே என்ன......சாப்பிடு...என்று கூறி.கறுப்பன்கூடச் சென்றான் மாயாவி.

நேரம் இரவு 8 மணி.இப்போது அவன் மனதில 10 பேரின் மனத்தைரியம் வந்ததுபோல ஒரு உற்சாகம்......இந்த உசாரோட ஐயாட்ட பணம் கேட்பது என்ற முடிவோடு...கறுப்பன் நன்றாகக் குடித்தபடியால அவனை நேரே அவன் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு... மீண்டும் கந்தவர்மன் வீடுநோக்கி...சயிக்கிளை மிதிக்கிறான்.
வீட்டு வாசலில்.....தன் சயிக்கிள் பெல்லை அழுத்தினான்.....கந்தவர்மன் வீட்டு நாய் சாதாரணமாக மாயாவி வந்தால் குரைக்காது...இன்று அவன் குடிச்சிட்டு வந்ததைப்பார்த்துவிட்டு குரைத்துக்கொண்டு நின்றது...

வாசலில் லைட்டைப்போட்டுவிட்டு யாரப்பா இந்நேரத்தில.....

ஐயா.நானுங்க.மாயாவி......

அட நீயா....என்ன....? என்ன வேணும் சொல்லு...? வாசலில் இருந்தே உரக்கக் கத்திக்கேட்டார்....?

ஐயா.......கேட்டைக்கொஞ்சம் திறவுங்கய்யா....சொல்லுறன்....

என்ன இந்த மாயாவி என்னைக்கும் இல்லாம....என்று மனசுக்குள் நினைத்தவாறு கேட்டை திறக்க.....மகேஸ்வரி நாயை பிடிச்சு பின்பக்கமாக துரத்திவிட்டு இருவருமாக அவனருகில் வர.......குப்பென்று சாராய நாத்தம் முகத்தில அடிக்க.....

ஆத்திரத்தோடு....என்னடா என்ன மாயாவி.உனக்கு எம்முட்டு தைரியம் இருந்தா இப்ப என்முன்னால குடிச்சிட்டு வந்து நிற்ப.....ஆ..? போடா ஒழுங்காய்ப்போய்ச்சேரு......

ஐயா.....மங்காக்கு ஊசிபோடனும் ஐயா......

அதுக்கு.........நான் என்ன டாக்டரா...? போடா.....போபோ...எனக்குமுன்னால நிற்காத...

ஐயா.....எதிர்பார்க்காமல் சயிக்கிலும் கீழ விழ இவன் ஐயா....ஐயா...எனக் காலில் விழுந்து அவர் கால்கள் இரண்டையும் பிடித்து அழுதான்....

ஐயா.......இல்லைன்னு சொல்லாதீங்கய்யா...எனக்கு உங்கள விட்டா யாருமில்ல ஐயா.....அவ உசிரு போப்போதுய்யா.....ஐயா...........உதவி பண்ணுங்க ஐயா.....எப்படியாச்சும் உங்க கடனை அடைச்சிடுவேன் ஐயா....ஐயா........நம்பி வந்திருக்கன்....மனசு வையுங்க...ஐயா.....அம்மா நீங்களாச்சும் சொல்லுங்கம்மா......

டேய்.டேய் முதல காலை விடு.எழுந்திரி.....எழும்படா.எழும்பு.....மண்ணில வேற புரண்டு....சீ.....மாயாவி.... எழும்படா.....

எழும்புறான்..கண்ணால் கண்ணீர் வழிந்தோடுகிறது மாயாவிக்கு.....

இஞ்ச பாரு மாயாவி........என்னஎன்றாலும் நாளைக்குப் பின்னேரமா வா..என்னான்னு விசாரிக்கிறேன். ( கேட்கிறேன்)...

இல்லய்யா.என்னால முடியாது எனக்கு அம்முட்டு தைரியமில்ல......அதுதான் குடிச்சேன் ஐயா.....குடிச்சபடியாலதான் எக்கு மனசு துணிஞ்சிருக்கய்யா......எனக்கு இல்லைன்னு சொல்லாமல் உதவி பண்ணங்க ஐயா....

அட லூசா.......எதுக்கும் நாளைக்கு வாடா.......

பக்கத்தில் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த மகேஸ்வரி.கூறினாள்...

அட என்னான்னு என்றாவது கேளுங்கப்பா......இல்லாட்டிக்கு இவன் விடமாட்டான்...

உனக்கு ஒன்றும் தெரியாது..குடிகாரன்பேச்சு .................காதில வாங்கக்கூடாது.....நீ உள்ள போ....

ம்.....என்னமோ அவன் பாவம் போலதான் இருக்கு.....ஆனாலும் இந்த மாயாவி எதுக்கு குடிச்சிட்டு வாறன்...? இப்படி ஒருநாளும் வரமாட்டானே....

சும்மாயிரு மகேஸ்வரி.....இவனைப்போல எத்தனைபேர நான் பார்த்திருக்கிறன்.இவனுகளுக்கெல்லாம்.......ஆண்டவன் அளந்துதான் படைச்சிருக்கான்....போ.......மாயாவி.எனக்கு முன்னால நிற்காத போயிட்டு நான் சொன்னமாதிரி நாளைக்கு வா.......

இனிமேலும் அங்கிருப்பது தனக்கு எந்த விதத்திலும் பயனில்லை என்று தெரிந்தவனாய்.....

சரிங்க ஐயா.....நாளைக்கு வாறனய்யா.என்று இரண்டு கைகளாலும் கண்களைத்துடைத்தபடி அங்கிருந்து தன் சயிக்கிளைத் குனிந்து எடுத்துக்கொண்டு ஏறி ஓடாமல் ஒரு பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு தன் ஓலைக்குடிசை நோக்கி நடைபோட்டான் மாயாவி.

வாசகர்கள், உங்கள் மனசாட்சி என்ன கூறுகின்றது என்று பார்த்து என் .....மனசாட்சியும்....

தொடரும்.



--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: