Monday, July 14, 2008

மனசாட்சி.... 2

நேரம் அதிகாலை, வழமைபோல கந்தவர்மன் 5 மணிக்கெல்லாம் எழும்பி, மரங்கள், செடிகள், கொடிகளுக்கு என்று தண்ணீர் ஊற்றிப் பின்பு புழுதி பறக்காமலிருக்க முற்றத்திற்கு நீர் தெளித்து விளக்குமாறு கொண்டு கூட்டிப் பெருக்கி, தானும் குளித்துவிட்டு வேலைக்கு வெளிக்கிட ஆயத்தமானார்....

ஆடுகளுக்கு குலைகள் வெட்டிப்போட்டபடி மகேஸ்வரியும் அவசரவசரமாக தேனீர் தயாரித்துக்கொண்டிருந்தாள்.

ஆட்டுப்பாலில் போட்ட தேனீரை கணவருக்குக் கொடுத்தபடி....

ஏனங்க.........நேரம் ஏழாகப்போகிறது. இவன் இன்னும் சயிக்கிள கொணார்ந்து தரல்லையே.....

ம்..ம்...நானும் அதைப்பற்றிதான் யோசிக்க நீயும் சொல்லுறாய். நேற்றே கையோடு எடுத்திட்டு வந்திருக்கவேணும். பிழவிட்டிட்டேன். வேலைக்கும் நேரமாகுது. இவனை வேற காணல்ல....

மனதில சங்கடம், உடலிலே எரிச்சலுடன் கோபமாக வாசலுக்கும், வீட்டிற்குமாக பல தடவைகள் போவதும் வருவதுமாகயிருந்தார் கந்தவர்மன்.

தூர மாயாவி வருவது அவர்கள் கண்ணுக்குப் புலப்படவே...

அந்தா பாருங்க அவன்தான் வந்திட்டானுங்க......

ம்....வரட்டும், வரட்டும் கழுதை.....காலங்காத்தாலே மனுசனுக்கு எரிச்சலை உண்டுபண்ணுறான் இவன்.

வாடா..வா....ஏன்டா உனக்கு புத்தியில்லையோ......இப்ப மணி என்னாகிறது. வேலை போனால்... பிறகென்ன உன்னோட சயிக்கிள் றிம் உருட்டத்தான் ஆசையோ...

ஐயோ......அப்படியில்லைங்கய்யா........வந்து.....

டேய் என்னடா வந்துபோயி.....போடா போ.... முன்னால நிற்காத..வேலைக்கு போற நேரமதுவுமா.....இந்தா பிள்ள...காசு எவ்வளவு என்று கேட்டு கொடுத்தனுப்பு...நான் போயிட்டு வாறன்.

என்னடா மாயாவி......ஐயா 7 மணிக்கெல்லாம் கந்தோருக்குப் போகவேணும் என்று தெரியாதோ...வீணா ஏனடா அவர்கிட்ட ஏச்சுப்பேச்செல்லாம் வாங்குறாய்...சரி....சரி......இவன் என்ன பள்ளிக்கு அனுப்பலையோ.....என்டா கோபாலு.கொப்பனைப்போல சயிக்கிள் கடையிலையோ கிடக்கப்போறாய்....படிக்ககிடிக்க ஆசையில்லையோ.......

ஆசைதான் அம்மா, ஆனா....அம்மா......

நான் என்னத்த சொல்ல......எப்படியாச்சும் பிழைக்கிற வழியைப்பாரு.சரியோ...
ஆமா மாயாவி ஐயா காசைக்கொடுக்கச்சொன்னாரே......எவ்வளவு தர...?

ஐயாட்ட என்னம்மா நான் கேட்கிறது..? பார்த்துதாங்கம்மா.....

25 ரூபா தரட்டோ....

பார்த்து தாங்கம்மா.....

ம்..இரு வாறன்..

ஏனப்பா......நீங்க சொல்லியிருக்கலாமுல்ல.....50 தரச்சொல்லி.

டேய் இல்லடா....அவங்க கிட்டபோய் அப்படி நாம கேட்கக்கூடாது. பாவம் அவங்களும் கஸ்டப்பட்டுத்தானே சம்பாதிக்கிறாங்க....நமக்கு இதுபோதும்டா....

அப்பா....ஏனப்பா அம்மாவைப்பற்றி சொல்லல்ல.....அவங்க உங்கள திட்டுறாங்க.பேசாமலிருக்கிறீங்களே...

சொல்லலாமுன்னு நினைச்சேன்டா.....அனா அவங்க.பொறுமையா கேட்கிறமாதிரி இல்லைன்னு தெரிஞ்சப்போ.......பேசாமல் இருந்துட்டேன்டா..

இந்தா மாயாவி......30 இருக்கு.

சரிங்கம்மா இன்னைக்கு உங்க கையாலதான் என் வருமானம், எப்படியும் குறைவில்லாமல் நடக்கும்..

சரி....சரி......இனிமே இப்படி நடக்காத சரியா.......

சரிம்மா வாறன். டேய்....அம்மாகிட்ட சொல்லிட்டு வாடா.....

போயிட்டு வாறனம்மா...

மகன் கொண்டு வந்த சயிக்கிளில் தகப்பனும், மகனுமாகத் திரும்பிப் போனார்கள். போகும் போது...கோபால் அப்பாவைப்பார்த்துக்கேட்டுக்கொண்டான்..

ஏனப்பா நீங்க ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்தானே....

அட அதைவிடுடா...

இப்படியே.நீங்களும் சொல்லாமல் இருந்தபடியாலதான் அவங்க பேச்செல்லாம் கேட்கவேண்டியிருக்கு......

டேய்.....மொக்குமவனே.....நாம சொன்னாலும் இவங்க நம்ப மாட்டாங்கடா.ஏன்னா அவங்க.....எப்பவுமே நம்மப்போல ஏழைஜனங்கள நம்புறதில்ல....அதனாலதா பேசாமல் இருந்துட்டேன். ஆனா சொல்லாமுன்னு நினைச்சு தொடங்கப்போக.....அவங்க பேசவே விடல்ல.....போகட்டும்டா விடுடா..

அப்பா....வாங்கப்பா......அம்மாவைப் பார்ததிட்டு வரலாம். வேணான்டா...அங்க வந்தா கடை திறக்க லேட்டாகிடும். அஞ்சோ, பத்தோ வாறதும் இல்லாமற்போயிடும்....அதனால ஆசுப்பத்திரிக்கு நீ போ....இந்தா அம்மாக்கு இளநீர் வேண்டிக்கொடுத்து நீயும் ஏதும் சாப்பிடு என்ன....நான் மத்தியானம் 12க்கும் 1 மணிக்கும் இடையில பார்க்கவிடுவாங்க.அப்ப வாறன் நீ போய் அம்மா பக்கத்தில நில்லு. எங்கையும் போயுடாதடா....பெரிய டாக்குத்தர் வருவாரு.நீ தான் தைரியமா நின்னு பேசனும் சரியா......
நடந்து போராசா....இன்னும் 10 நிமிசத்தில ஆசுப்பத்திரி வந்திடும்.

நான் 5 நிமிசத்தில ஓடியே போயிடுவேனுல்ல.....

தகப்பன் கொடுத்த 30 ரூபாவையும் வேண்டி அதைச் சுருட்டிப் பத்திரமாய் காற்சட்டையின் பாக்கெட்டினுள் அடியில் அமர்த்தி அமர்த்தி வைத்துவிட்டு முன் சேர்ட்டில் பட்டின் இல்லாத இடத்தில் குத்தியிருந்த ஊசியைக்கழற்றி காற்சட்டையின் பாக்கற்றின் காசு வைத்த பகுதிக்கு காசு கீழே விழாதவாறு ஊசி கொண்டு பின் பண்ணினான்.

வண்....டூடூ.....திரி.....என்று தனக்குள்ள சொல்லிக்கொண்டு ஓட ஆரம்பித்து...ஆஸ்பத்திரி நோக்கிச்சென்றான் கோபால்.

டேய்....காசு பத்திரம்டா.....

தகப்பன் சொன்ன வார்த்தைகள் அவன் காதில விழவில்லை. 9 வயது நிரம்பியபையனவன்.....பள்ளிக்குச் செல்வதும், செல்லாமல் விடுவதும், வறுமையில வாடுவதும். ஏக்கங்களும், வேதனைகளும்.. அவனைப்பொறுத்தவரையில் அவனுக்கு அவைகளே முழுச்சொத்தும்.

வேகாத வெய்யிலில் கால்கடுக்க....கை உளைய பழைய சயிக்கிள்களைப்போட்டு உருட்டி, உருட்டிப் பட்ச் போடுவதும், முதுகு வளைய வளைய காத்தடிப்பதுமாக அவன் அன்றாட வாழ்க்கைச்செலவு பயணிக்கும் வேளையில்......நேற்று இரவு நடந்த சம்பவத்தை நினைச்சுப்பார்த்தவுடன் மீண்டும் அழுதான்.....மாயாவி...கண்களால் வழியும் அவன் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாமல் இருகைகளிலும் ஓயில் இருக்க.....உள்ளங்கைகொண்டு கண்களைத்துடைத்து துடைத்து.....அழுதான்...
அவன் அழுதது.அவனுக்கு மட்டும்தான் தெரியும். பழைய சயிக்கிள்கள் என்றால் மட்டும்தான் மாயாவியிடம் தேடி வரும். புதிய சயிக்கிள் என்றால் இயந்திரங்கள் கொண்டு காற்றடிக்கும் பம், பட்ச் போடும் மெசின் பூட்டப்பட்டுள்ள........ வேறு இடங்களுக்குச்செல்லும். குறிப்பாகச் சொல்லப்போனால்......வசதிபடைத்தோரின் பெரிய கட்டிடக் கடைகள் வந்தபின்பு...இப்படியான ஏழைஎளியவர்களின் கடைகளுக்கு.....அரிக்கன்லாம்புக்குக்கூட எண்ணெய் வேண்டவே வருமானம் பத்தாது. அவர்கள் வயிறு நிறைய சாப்பிடுவது என்றது......ஊரில பொங்கல் வந்தால்தான்.



தொடரும்.....

No comments: