Monday, July 14, 2008

மனசாட்சி........4

ஏய் ஒன்னத்தான்....கொஞ்சம் தள்ளி நில்லு......பேஷன்ட்டுக்கு கிட்ட ஈ மொச்ச மாதிரி கிட்டப்போகாதே.....கொஞ்சம் காத்தாவது வரட்டும். ஆமா...யாரு.இவ உன் பொண்டாட்டியா...? ஏன்யா.....உணர்வுப்பசிக்கு தீனி போட்டால் சரியா..? அவளுக்கு வயிறு இருப்பது தெரியாதா உனக்கு......கர்மம்..கர்மம் உனக்கெல்லாம் பொண்டாட்டி கேட்குது....குளிசிட்டாவது வந்தியா....வேர்வை நாத்தம் இங்க அடிக்குது......நேரமாகிறதிற்குள்ள வெளியேறு.....நீங்களெல்லாம் சுத்தமா இருந்தா ஏன் இந்த வியாதிகளெல்லாம் வந்து உங்கள அண்டுது.......ம்ம்.....என்னத்தச் சொல்லி எங்க திருந்தப்போகுதுக....

அந்த 8 ம் நம்பர் வார்ட்டின், அந்நேர கடமையிலிருந்த உடல் பருத்த நேர்சிடமிருந்து வந்த கடும் சொற்களால் வேதனைப்பட்டவனாகயிருந்தாலும், அதனை வெளிக்காட்டாது......மனச்சுத்ததுடன்....ஒரு அடி தள்ளி நின்றே மங்காவின் தலையைத்தடவியபடி....ஏன்ம்மா இப்ப எப்படியிருக்கு......? மருந்தெல்லாம் தாறாங்களா...?

கண்கள் கலங்கியபடி மனைவியைப்பார்த்து கேட்டதிற்கு.அவளிடமிருந்து உடனடியாகப்பதில் எதுவும் வரவில்லை. அவள் குரல் வெளிவரத்தடையாகயிருந்தது......மாறாக கண்ணீர் மட்டும் ஓரமாக வழிந்தது கண்டு.....அவள் கண்களைத் துடைத்துவிட்டபடி..

என்னம்மா......என்ன செய்யுது....? களைப்பா இருக்கா.....? நான் போய் குளுக்கோசு வேண்டி வரட்டுமா...?

என்று சொன்னவன்......அடுத்த கட்டிலில் ஒரு தாயைப்பார்க்க வந்திருந்த, 3 சிறு பிள்ளைகள், அவர்கள் தந்தை அவர்கள் அந்தத் தாயிற்கு கொண்டு வந்திருந்த கிறீம்கிரக்கர் பிஸ்கட், ஒரு பிளாஸ்கில் ஹோர்லிக்ஸ்....அதனைத் திறந்து ஒரு கப்பினுள் விட அந்த மணத்தில் ....ம்.......என்று மூக்கை இழுத்துக் கொண்டு அங்கையே வைத்த கண்வாங்காது பார்த்துக்கொண்ட கோபாலை...கண்டான் மாயாவி.

மாயாவிக்கு மனசு தாக்கியது. தன்மகனின் ஏக்கம் அவனுக்குப் புலப்படவே....ஐயோ......பாவம் புள்ள எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறான்.. என்றது நினைவுக்கு வரவே...அவனிருக்கும் அவ்விடத்திற்குப்போனான்....அப்போது...அவர்கள் பேச்சு காதில் விழுந்தது...

" அம்மா..அம்மா....நம்ம ஷிம்பா 5 குட்டிபோட்டிருக்கு.....3 பிளக்கலர்...2..பிரவுன் அன்ட் வைட் கலர்...

அட அப்படியா.......அம்மா வந்து பார்க்குமட்டும் பத்திரமா நல்லாப்பாருங்க என்னம்மா...ஏங்க.....கடைதெருவுகளுக்கு போறதிற்கு யாராச்சும் சின்னப்பையனா வேலைக்குப்பாருங்க.என்றேன்.....பார்க்கல்லையா...?"

டேய் கோபாலு.....வாப்பா.......

அப்பாவின் குரல்கேட்டு ஓடி வந்தான்...

நாம போயி சாப்பிட்டுவருவோம்...என்ன....
அம்மாகூட இன்னும் கொஞ்சநேரம் பேசிட்டுப்போவம் சரியா.....அம்மா தூங்கும் போது போவம் சரியா.....

சரிப்பா......எனக்கும் சரியா பசிக்குது.....அவங்க சாப்பிட இன்னும் பசிக்குதப்பா...வாப்பா.இப்பவே போவோம்...
அப்பா, அப்பா மறந்துட்டேன்.....

என்னப்பா......

அப்பா அம்மாக்கு சிக்கின்குன்யா காய்ச்சலாம்.....அந்த பெரிய நேர்சிட்ட பேசச்சொன்னாங்கப்பா......

அந்தச்சொல்லைக்கேட்டவுடன், கதிகலங்கிப்போனான். அந்த நோய் பற்றி கசக்கி எறிந்த பழைய பத்திரிகைகளிலே பார்த்து அறிந்து கொண்டவன். இப்போது தன் மனைவிக்கு அதுதான் நோய் என்றதை, மகன் கூறக் கேட்டு ஆடியே போனான்.....இப்போது அவனுக்குப்புரிந்தது...எதற்காக அந்த நேர்ஸ் தன்னை தள்ளி நிற்கச்சொன்னதும், காற்றுப்படவேண்டும் என்று சொன்னதும்.....தனியாக முதல் ஆளாக மங்காவை வைத்திருப்பதையும் நினைத்துச் சகலதும் விளங்கிக்கொண்டான் மாயாவி.

உள்ளே பிரைவேட் ரூமுக்குள் சென்ற நேர்ஸ்.......நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவள் வரும் வரையில் காத்துக்கொண்டிருந்த மாயாவி....நீண்ட நேரத்தின் பின்பு அந்த நேர்சும், புதிதாக வந்த இளைஞன் டொக்டரும் பிரைவேட் ரூமை விட்டு வெளியே வந்தார்கள்.

அவர்களைக்கண்டவுடன்.....பெரும் ஆனந்தத்தோடு.....

அம்மா......பையன் ஏதோ சொல்லுறான்.......என்னோட மங்காவிற்கு....என்னமோ சிக்கின்குன்யா என்று......அப்படிங்கலா....

அட மறந்தே போயிட்டன்.....ஆமா..ஆமா......அது உன் பொண்டாட்டி றிப்போர்ட்டா......ம்.தெரிஞ்சு என்னபண்ணப்போற....? இந்தா......இந்த ஊசி மருந்தை வாங்கிட்டு வா.....3 ஊசி போடனும்...இங்க ஸ்ட்ரொக்கில இல்ல.....விலை அதிகம் தான்......யாருடைய காலையாவது பிடிச்சு வாங்கிவந்தால்தான் அவ பிழைப்பா.......

சொல்லிக்கொண்டு கண்ணால் ஜாடை காட்டி புதிய இளைஞர் டொக்டருக்கு பல் இளித்தபடி, கொஞ்சம் வசதி படைத்த நோயாளர் பக்கம் நடைபோட்டு பேச்சுக்கொடுத்து கலக் ஷனுக்கு அடி போடச் சென்றுகொண்டிருந்தாள் அந்தத் தாதி.

மாயாவியினால் என்ன செய்வது என்று தெரியாமல்....அரை மயக்கத்தூக்கத்திலிருந்த மங்காவிடம் தான் போயிட்டு 5 மணிக்கு வருவதாகச்சொல்லி அந்த ஊசி மருந்துத்துண்டையும் எடுத்து பாக்கெற்றினுள் புதைத்து விட்டு மகனுக்குச் சாப்பிடக்கொடுத்துவிட்டு மருந்துக் கடை ஒன்றினுள் நுளைந்தான்...

ஐயா........இதற்கு எவ்வளவு பணம் செலவாகும்...?

சீட்டை வேண்டிப்பார்த்தவர்....

என்னப்பா......இந்த ஊசி மருந்து...யாரு உனக்கு எழுதித்தந்தது...?

தர்ம ஆசுபத்திரியிலய்யா...

பேருக்குத்தான் தாமம்.......ஆனா.....அங்க நடக்கிறதெல்லாம் யாரு கேட்பான்...? அங்க மருந்துகளை களவா பிரைவேட் டிஸ்பன்சரிக்கு விற்குறது....வித்துப்போட்டு பாவம் உன்னப்போல ஏழ எளியவங்க வயிற்றில அடிக்கிறதே வழக்கமாப்போச்சு.......ஏலாதப்பா.உனக்கு அதன்... விலை வேணாப்பா......உன்னால முடியாது......யாருக்கு..? உங்கம்மாக்கா...?

இல்ல......அங்கிள்..என்னோடம்மாக்கு......

டப்பென்று பதில் சொன்னான் கோபால்.

ஓ......அப்படியா....? ஐயோ.......பாவம்......பச்சப்புள்ள....
இஞ்ச பாரு......நான் எதுவுமே செய்யமுடியாது பரிதாபப் படத்தான் முடியும். நானும் பெரிய பணக்காரன் இல்ல..உனக்கு வாங்கித்தர. நானும் மாசச் சம்பளக்காரன். வேணுமுன்னா.....100 ரூபா தாறன்......மிச்சம்ப்பணம்...யாரிடமாச்சு கேட்டுப்பார்....கிடைச்சால் வாப்பா.....

ஏன்ய்யா எம்முட்டு ஆகும்......?

மனசில நடுக்கம், கண்களில ஏக்கம்........என்ன பதில் வருமோ என எதிர்பார்ப்பு.....ஆவலாய் மாயாவி...

சொல்லவே மனசுவரலப்பா......3 ஊசி மருந்துக்கும் 900 ரூபா ஆகும்.

900 ஆயிரமா.......அம்முட்டு ஆகுமா.......நிஜமாவா......

ஆமாப்பா.... இந்த மதிய நேரத்தில வந்தபடியால உன்னோட பேச முடிஞ்சுது.இதுவே சாயந்தரமாகயிருந்தால்...முதலாளி வேற கடையில நிற்பார்....மறு பேச்சின்றி வெளியால துரத்திப்போட்டிருப்பார்....சரி......மிச்சக்காசையும் எடுத்துக்கொண்டு வாப்பா.....நான் சொன்ன மாதிரி 100 ரூபா தாறன் சரியா....

இப்படியும் கருணையுள்ளம் இருக்கு என்றதை நினைத்தவனாய்......மெழுகுதிரிபோல மங்காவிற்கு தைரியம் எனும் வெளிச்சமாகவும், உள்ளுக்குள் உருகும் மெழுகுபோலாகவும்.....தன்னை நொந்துகொண்டு அடிக்கடி தன்னிடமிருந்த, பணத்தை திரும்பத்திரும்ப எண்ணிப்பார்த்ததில்.......150 கூட இல்லை.

அழுதான்....மீண்டும்......அழுதான்......எதற்காக இப்படி வாழ்க்கை..? என்ன பாவம் செய்தோம்....? அழுவதைத்தவிர எமக்கெல்லாம் விடிவேயில்லையா.யாரிடம் போய் கையேந்துவது...50 ஆ..100 ஆ கடன் பெறுவதற்கு....??? அவன் நினைத்துப்பார்ததில்.

கந்தவர்மன் ஐயா தான் கண்களுக்கு வெளிச்சமாகத்தோன்றினார். சாதாரண வசதி படைத்தவர்தான்.....அவருடைய பிள்ளைகள் நான்கு பேர்கள். அனைவரும் வெளிநாடு.....யாருடைய பணத்தையும் எதிர்பார்க்காமல் இன்னும் ஓட்டச்சயிக்கிளில் உலா வரும் இறுக்கப்பேர்வழி அவர். ஆனாலும் கெளரவமானவர். எப்படியும் மாயாவிக்கு உதவுவார் என்ற நம்பிக்கையில்.....அவன் கற்பனையில்.....வேலைமுடிந்து அவர் வரும் வரையில்.....அவர் வீட்டு வாசலில் ஒட்டிய வயிற்றுடன் காயப்போட்டிருக்கும் .....வடகம் போல இவனும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தான்.

தொடரும்.......


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி

No comments: