Monday, July 14, 2008

மனசாட்சி....3

ஆ..அம்மா...ஐயோ....நடுங்குதே....என்னங்க....இங்க....பாருங்க....உடம்புக்கு முடியலங்க...

கொஞ்சம் பொறு...விளக்கைத்தூண்டிவிட்டு வாறன். அடடா.......உடம்பு ரொம்ப கொதிக்குதே.....டேய்......கோபாலு.கோபால்...

பாயில் படுத்தபடி கண்ணைத்திறந்து என்னப்பா...? மழைபெய்யுதா......

இல்லடா....உங்கம்மாக்கு காய்ச்சலாயிருக்கு....அதுதான்......அந்த காய்ச்சல் குளுசை எங்க இருக்கு...அதைக் எடுத்துக்கொண்டுவாப்பா......

ஐயோ...காலெல்லாம் வலிக்குதே.....அம்மா....வயிறெல்லாம் புண்ணா வலிக்குதே......ஒருநாளும் இல்லாம.....

அப்பவும் நான் சொன்னனான்..........மழைநேரங்களில இந்த அரிசியிடிக்கிர வேலைக்குப் போகாதே என்று.....ம்........கேட்டால்தானே.....ஈர நிலத்தில நின்று அரிசியிடிச்சபடியாலத்தான் குளிரேறிப்போச்சு......

எனக்கென்ன இதெல்லாம் புதுப்பழக்கமோங்க......ஏதோ வரவேண்டிய பலன் என்றால் வந்துதானே தீரும்..இந்தக்குளுசை போட்டாலும் தீர்ற மாதிரியில்லைங்க.....பெரியாஸ்பத்திரிக்குப்போனால்தான் சரியாகும் என்று நினைக்கிறேன். ஏனங்க பஞ்சியைப்பார்க்காம போவமாங்க......

உன்னைக் கூட்டிட்டுப் போறவேலையைவிட்டுட்டு எனக்கென்ன பஞ்சி வேறயிருக்கு...இந்தா சயிக்கிள எடுக்கிறன்...ஏப்பா கோபாலு....நீ தனிச்சு இருக்கமாட்டாய்......நீயும் வாப்பா.....

ஏப்பா........அம்மாக்கு என்னாச்சு....?

ஒன்னுமில்லடா.......உங்கம்மாக்கு லேசா..காச்சலாயிருக்கு....பயப்பிடாதேடா வா...கெதியா...

சயிக்கிள் பாரின் முன்னுக்கு மனைவி மங்காவையும், பின்னுக்கு மகனையும் வச்சுக்கொண்டு மிதிக்கத்தொடங்கினான்...மாயாவி.

ஐயா..என்னாச்சு ஐயா.....பார்த்துச்சொல்லுங்க..ஐயா...

வெயிட் பண்ணுங்க....பிளட் அனுப்பியிருக்கோம். லபோரட்ரியினால ரிசல்ட் வந்தபின்புதான் தெரியும்.....என்னான்னு....அதுவரைக்கும் பேஷன்டை டிஸ்டொப் செய்யாதீங்க....

அது எப்ப வருமய்யா......?

எனக்கென்ன தெரியும். வெயிட் பண்ணுங்க....சரியா.......யாரு..இவன் உங்க பையனா.....?

ஆமாங்கய்யா......பேரு கோபாலு....

இங்க எல்லாம் எதுக்கு கூட்டி வாறீங்க....? நீங்களாகவே தேடிக்கொள்ளுங்க....வியாதிகளை....பிறகு எங்கிட உயிரை வாங்குங்க.....

யாருமில்லைங்க ஐயா......சின்னப்புள்ள......தனியா தூங்கமாட்டான்..அதுதான்....இங்க கூட்டியாந்துட்டன்...

ம்ம்.......என்னாவது பண்ணித்தொலையுங்க.....பையன அந்த பெஞ்சில படுக்கச்சொல்லுங்க....

சரிய்யா.....

அப்பா....அம்மாக்கு என்னப்பா.....ஏனப்பா அம்மா கண்ணால தண்ணியோடுது...? அப்பா அம்மா பாவமப்பா......அம்மா...அம்...மா...

டேய் அழுவாதடா......அம்மாக்கு ஒன்னுமில்ல......அந்த காளியம்மா நமக்கு ஒரு கெடுதலும் வைக்கமாட்டா.....படுடா ராசா...

அப்பா.நீ தூங்கலையா....?

இல்லப்பா......அப்பாக்கு தூக்கம் வரல்ல.....நீ தூங்குப்பா....

அதிகாலை வரை எந்த றிசல்ட்டும் வரவில்லை. டொக்டர்மார்கள் மாறி மாறி வந்து மங்காவைப்பார்த்துவிட்டுப்போனார்களேயொழிய எந்த மாறுதலும் இன்றி இன்னும் அதிகமாக முனங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

நேரத்தைப்பார்க்கிறான்....மாயாவி. காலை 6.45 காட்டியது.. ஆஸ்பத்திரி கடிகாரம். அப்போதுதான் அவனுக்கு கந்தவர்மன் ஐயாவின் சயிக்கிள் ஞாபகத்திற்கு வந்தது....

ராசா...கோபாலு.எழுந்திருடா....ஐயா வீட்டுச்சயிக்கிள் கொடுக்கவேணும்.....

ஐயோ..என்னப்பா நீங்க......ஒழுங்கா தூங்கவிடமாட்டீங்கலாம்....நா வரல்ல..நீங்க போயிட்டு வாங்க...

நான் மட்டும் போனால்.வரஏலாதப்பா......நாங்க.....வீட்ட போய் ஐயா சயிக்கிள எடுத்துக்கொண்டு போவோம்....

ஏப்பா.....மாயாவி.....? அப்பா மாயாவி....கூப்பிட்டுப்பார்த்தார்.....அந்தப்பெரியவர்.
என்னப்பா....? என்ன யோசனை..? இந்தாப்பா...இந்தச்சயிக்கிள் செயின் ஒரே கழன்டு கொண்டேயிருக்கு....ரொம்ப லூசாகிட்டு என்று நினைக்கிறேன்.பார்த்து அஜஸ்ட் பண்ணித்தாப்பா.....

ஓ.....ஐயாவா....வாங்க..ஐயா....ஏதோ சிந்தனையில இருந்துட்டன்....என்று, நேற்றிரவு நடந்தது முதல் காலை வரை நடந்த சிந்தனையிலிருந்து விடுபட்டான் மாயாவி.

என்னப்பா.கண்ணெல்லாம் சிவந்திருக்கு....

ராவு தூங்கல்லைய்யா........

என்னப்பா ஏதும் குடிச்சியா....

இல்லய்யா.....மங்காவிற்கு உடம்பு சரியில்ல......தர்மாஸ்பத்திரியில விட்டிருக்கேன்....

அப்ப நீயும் அங்க நிற்க வேண்டியதுதானே......இங்க ஏன் வந்தே...

என்னய்யா......அங்க பொம்பிள வார்ட்டு நா நிற்கமுடியாதய்யா.....அவன் பையன் சின்னவன்தானே அவனை அனுப்பிவச்சிருக்கன்....அதைவிட இங்க வார வருமானமும் இல்லாமற்போயிடும் ஐயா...

என்னத்தா பெரிசா உழைச்சிடப்போற....உனக்கெல்லாம் மனசாட்சியேயில்லைப்பா.....

படார் என்று கன்னத்தில அடிச்சதுபோலயிருந்தது அந்தச்சொல்.அவனுக்கு....

அவனா மனசாட்சியில்லாதவன்...அவன்.ஏழை என்ன செய்வான்..? எந்தப்பக்கம் சுற்றிசுற்றித்திரிந்தாலும்.அவன் செய்கிறதெல்லாமே ஞாயமாகவே அவனுக்குப்பட்டது....எப்படா மதியம் 12 மணியாகும் என்று அடிக்கடிநேரத்தைப்பார்த்துக்கொண்டிருந்தான்.....அவன் சிந்தனையெல்லாம் மங்கா நினைப்புத்தான். அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்று உலகிலுள்ள அத்தனை தெய்வங்களையும் வேண்டிநின்றான்.
நேரம் மதியம் 12 என்றதிற்கு அடையாளமாக......எதிராக இருந்த டீ கடையில இருந்து..வானொலிப்பெட்டியில........செய்திகளுக்கான நேரம் என்ற அறிவிப்பு வந்ததைத்தொடர்ந்து.......உற்சாகம் வந்தவனாக.....சாத்தியிருந்த பலகைகளை எடுத்து கடையை பூட்டி...மீண்டும் சயிக்களை மிதிக்கத்தொடங்கினான்....மாயாவி....ஆஸ்பத்திரியை நோக்கி.



தொடரும்......

No comments: