Friday, November 14, 2008

மனசாட்சி.....6

அப்பா...எழுந்திரிங்க....அப்பா.......அம்மாகிட்டப்போகனுமப்பா... அப்பா....எனக்குப்பசிக்குதப்பா....
அடப்போடா அங்கால....

கண்ணைத்திறக்காம ஒருகையால மகனைத்தள்ளிவிட்டான் மாயாவி. அடிக்கடி, ராத்திரி நேரங்களில் மாயாவி குடித்துவிட்டு காலையில எழும்பஏலாமல் இருக்கும்போது மங்கா தண்ணீர் முகத்தில் தெளித்து எழுப்பிவிடுவாள். இதனை அறிந்த கோபாலும் தன் அம்மா செய்வதுபோல தகரத்தினால் மூடியிருந்த ஒருவாளியினுள் (bucket) இருந்த தண்ணீரை இருகைகளாலும் ஏந்தி வந்து மாயாவியின் முகத்தில் தெளித்தான்....

அடி......அடியேய்....மங்கா...விடுடி....வேணாம்டி.....நா ....

இதனைப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கோபால்....இருகைகளையும் கொட்டி துள்ளித்துள்ளி சிரித்தான்...

ஹி...ஹி..ஹி...ஐயோ....அப்பா.அம்மா இங்கில்ல....மறந்துட்டீங்களா...

ஆ.......அட....இம்முட்டுநேரம் தூங்கிட்டேனா...?

மாயாவி...மாயாவி.....அதே காலணியில வசிக்கும் சுந்தரபாண்டியனின் குரலில் மாயாவியின் பெயர் கொண்ட அழைப்பு...

சுந்தரபாண்டியன்......பாண்டியண்ணன் என்று யாவராலும் அன்பாக அழைக்கப்படும் நல்ல தீர்ப்புச்சொல்லும் ஒரு பெரியவர்போலவே அந்தக்காலணி மக்களால் கெளரவிக்கப்பட்ட நபர்.

அதிகமில்லை..ஆனாலும் மற்றவர்களோடு ஒப்பிடும்போது சாதாரணவசதிபடைத்தவர் என்றும் கூறலாம். அவரிடம் மற்றவர்களுக்கு உதவுமுகமாக அதிக வருமானமாக இருப்பது அவருடைய அன்பான பேச்சு...அவர் வருமானமாகப்பெறுவது சிலபேரின் திட்டுக்கள்.

எதுஎப்படியோ..அன்பான அண்ணா பாண்டியன்.

இதோ வந்திட்டேன்ணா....பாய்ஞ்சடித்துக்கொண்டு கட்டியிருந்த லுங்கியை சரியாகக் கட்டிக்கொண்டு வாசலைநோக்கி ஓடிப்போனான் மாயாவி...

ஏன்டா...ராத்திரி குடிச்சியாக்கும்...

அது வந்தண்ணா....உள்ளவாங்கண்ணா....

ஆமா பெரிய வூடு பாரு உள்ள வாறதிற்கு....

சிரித்துக்கொண்டே உள்ளே வருகிறார்.....

யாருடைய ஞாபகக்கதிரையோ என்னவோ பின்னல்கள் அறுந்த நிலையில வீசப்பட்டு வீதியில இருந்த கதிரையை வீட்டிற்கு கொண்டுவந்து தன் கைத்திறமையால் கயிறுபோட்டுப் பின்னி அழகாக வைத்திருக்கும் அதனை பாண்டியண்ணாவிற்கு இருக்கக் கொடுத்தான்.

இதி உட்காருங்கண்ணா.....இதோ வாய்அலம்பிட்டு வந்துடுறன்..

ம்ம்....நான் போனும் சீக்கிரம் வாப்பா....

சொல்லுங்கண்ணா....

ஏன்யா மாயாவி....நீ திருந்துற எண்ணமேயில்லையாப்பா...? இப்படி குடிச்சிப்புட்டு கிடந்தா உன் வூட்டில அடுப்பெரியுமாப்பா...? நான் இன்னைக்குத்தான் அறிஞ்சேன் நம்ம மங்கா ஆசுப்பத்திரியிலையாம்ண்ணு...
நீ வேற இப்படி குடிச்சிபுட்டுக் கிடந்தா அவவை யாரு கவனிக்கிறது...? ஏன்டா

உனக்கு கொஞ்சம் கூட புத்தியிலையாப்பா.....உனக்கு ஒரு பையன் வேற அவனையாவது ஒரு ஆளாக்கிப் பார்க்கவேணாமா...? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இதே பழக்கத்தில கிடப்பாய்...?

இல்லண்ணா வந்து கவ...லையா..

என்ன.கவலையா..என்ன பொல்லாத கவலை....?
அட குடிப்பா யாரு வேணாம்ண்ணது.....ஆனா...உன் நிலமையை எண்ணிப்பாரு...? ஒருநாள் சோற்றுக்கே தாளம் போடுற நேரத்தில இது உனக்குத் தேவையா...முதல்ல....பணத்தை சேமிச்சுப்பழகு.அப்புறமா முன்னேறப்பழகு...அதற்கப்புறமா உன் இஷ்டம்....நான் இப்ப வந்தது.....மங்காவைப்பார்க்கப்போனேன். அவங்க முதல்ல விடல்ல.அப்புறமா அவ அண்ணன் எண்டு சொல்லிப் போய் பார்த்திட்டு வந்தேன்...

நான் இனித்தான் போகனுமண்ணா .தூங்கிட்டேன்....(தயங்கித் தயங்கிக் கூறினான்..)

ம்.....ம்...அது தெரிஞ்சுதான் அங்க இருந்து நேர இங்க வந்தன்...ஆமா என்னமோ ஊசி போடவேணும்முண்ணுசொன்னாங்க....ஒழுங்கு பண்ணிட்டியா...?

தலையைச்சொரிந்த படி.....இல்லைண்ணா.....ஐயாகிட்ட கேட்டிருக்கேன், இன்னைக்கு சாயந்தரம் வரச்சொல்லியிருக்கிறாரு...

ஓ....அப்படியா...ரொம்ப நல்லதப்பா.மறந்திடாம ஐயாவைப்போய் பாரு...நம்மால முடிஞ்ச உதவியை செய்வோமுல்ல......எதுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அலுவலைப்பாரு மாயாவி...

ஆகட்டும் அண்ணா....

ம்ம்.....நேரம் 9 ஆகப்போகுது....இதில 50 ரூபாயிருக்கு.....நீ வேற 2 நாளா கடையத்திறக்கல்ல எண்டு சொன்னாங்க.செலவுக்கு வச்சிரு....பயனுக்கு சாப்பாடு வாங்கிக்கொடு......நான் அப்புறமா வந்து பார்க்கிறன். போயி மறக்காம ஐயாவைப்பாருப்பா....என்னமோ அந்த அம்மாளுதான் மங்காவைக் காப்பாற்றனும்...

அவ்விடத்தைவிட்டு விடைபெற்றுச்சென்றார் அண்ணன் பாண்டியன்.

அவசரவசமாக உடைமாற்றிக்கொண்டு கோபாலையும் கூட்டிக்கொண்டு கடைக்குப்போய் இருவரும் சாப்பிட்டார்கள். அப்படியே தன் கடைப்பக்கம் சென்றான். கடையைத்திறந்து அன்றைய வருமானத்தை எண்ணாமலே தெரிந்துகொண்டான். 40 ற்கும் அதிகமில்லை.

நேரம் மதியம்...ஆஸ்பத்திரி வாசலில் ஆங்காங்கே சீவப்பட்ட இளநீர் கோம்பைகளும்,சாப்பிட்டு வீசிஎறியப்பட்ட வாழையிலைகளும், அதனைச் சூழ்ந்து தெருநாய்களும், கா...கா...எனக்கத்திக்கொண்டு இருப்பதை பகிர்ந்துண்ணும் காக்கைகளும், எந்தப்பயணிகள் வருவார்கள் எனக்காத்துக்கொண்டிருக்கும் ஆட்டோக்களும்....இது மதியவேளை பார்வையாளர்கள் நேரம் என்று காட்சிகள் படம் பிடித்துச்சொல்லிக்கொண்டிருந்தன.....

மொழிகள் வித்தியாசமின்றி, மதங்கள் வித்தியாசமின்றி உடலும், உயிரும் என்ற ரீதியில் ஒன்றாகக்கூடும் அந்த ஆஸ்பத்திரியில் மாயாவியும் கோபாலும் நோயாளர் பிரிவுக்குச்சென்று மங்காவை பார்க்கச்சென்றார்கள்.....

பார்க்கமுடியவில்லை......மங்காவைச்சூழ்ந்து 4 டாக்டர்மார்கள்....அவள் மூக்கிற்கு செயற்கை சுவாசம் கொடுத்தபடி....செலைன் இரண்டுகைகளிலும் ஏறிய நிலை.....அவள் விழி மேல்நோக்கியிருக்க....பெருமூச்சின் சத்தம் அதிகரிக்க....உடனடிச்சிகிச்சை மேற்கொண்டுஇருந்தார்கள்...

இக்காட்சியைக்கண்ட கோபால் அம்மா.அம்மா எனக் கதறியழத்தொடங்கினான்....அவன் வாயை பொத்துகிறான் மாயாவி.பின்னால திரும்பிப் பார்க்கிறான்...இன்னும் 4, 5 பேர் கூட்டமாக அவனைக்கண்ட...ஒரு சிலர் ....உங்க மனைவிதானேப்பா....

ஆ...ஆமா...

அடப்பாவம் அந்தப்பொண்ணு.ரொம்ப நேரமா பெரிசா கதறிச்சு..ஆனா யாருமே போகல்ல...அப்புறமா இப்பதான் பார்க்கிறன்.......ஏதோ ட்ரீட்மென்ட்....கொடுக்கிறாங்க....

அடக்கடவுளே.அப்படியா...?

அட ஆமாப்பா.....எல்லா மனசுகளும் ஒரே மாதிரியில்லப்பா.....ஏழைங்களுக்கு ஒரு மாதிரியாகவும், கொஞ்சம் வசதி படைத்தவங்களுக்கு வேறு மாதிரியாகவும் பிரிவு பார்த்தே வைத்தியம் பார்க்கிறாங்க.....அங்க பாருங்க...இங்க வந்த இடத்தில அவங்க அம்மா விழுந்திட்டாங்களாம். இன்னைக்கு அவங்க தங்கட ஊருக்குப் போவதாக இருக்காங்க....என்னமா நேர்ஸ் எல்லாம் போயி அவங்கள சுற்றி நின்னு வழியிறாங்க...

மெதுவாக திரும்பிப் பார்த்தான்....அந்த 3 பிள்ளைகளோடு வந்த தந்தை..
ம்.அவர்கள்தான்.....

மங்காவைச் சுற்றியிருந்த அனைவரும் விடைபெற்றனர்....ஒரு தாதியிடம் போய் பார்க்கலாமா எனக் கேட்டுக்கொண்டான்....மாயாவி...

அவளும் அதற்கு பையனை விட்டிட்டுப்போய் பாருங்க என்றாள்..

அதன்படியே மாயாவி அழும் மகனுக்கு ஆறுதல் கூறிவிட்டு.மங்காவின் அருகில் சென்றான்....

தொடரும்....

-------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தானிமதி

www.nilafm.com

No comments: