Friday, November 14, 2008

மனசாட்சி.....7

மங்காவின் நிலையைப்பார்த்ததும், மாயாவிக்கு கவலைஅதிகமாகியது..நா வறண்டது போல உணர்வில் வார்த்தை வெளி வராது.....மெல்லத்திரண்டு தொண்டைக்குள் அடைத்து வந்த சோக உருண்டைகளை எச்சில் இட்டு விழுங்கினான்....மாயாவியின் கை பட்ட உஷ்ணத்தினால் மங்காவும் மெல்ல மெல்ல இமைகளை விரித்தாள், கண்ணெதிரே மாயாவி மங்கலாகத் தெரிந்தான்.....

அவள் கண்கள் கலங்கி நீர் வழிந்து, அவள் உடல்வெப்பத்தால் தடையங்களாக அப்படியேயிருக்க......மங்காவின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் எனத் தன் மனத்திற்கு ஆணிகொண்டு அறைந்தவேதனையை உணர்ந்தான். எதுவுமே பேசாது......இருந்தவனை.....கையை மெதுவாக அசைத்து உயர்த்தி மகனைக்கேட்டாள் மங்கா...

இருக்கிறான்.....ஸ்கூலுக்கு அனுப்பிச்சிருக்கேன்....

தேய்பிறையானாலும் நிலவிலும் ஒளியிருப்பதுபோல மங்கா மெல்லச்சிரித்தாள்.....தனக்கு பொய் சொல்லுகிறார் மாயாவி என்றதை நன்றாக உணர்ந்து கொண்டாள்....தன் நாக்கினால் அடிக்கடி உதட்டை நனைத்துக்கொண்டாள்.....அவளுதடு காய்ந்து வெள்ளைத்தோலுரிந்தது போலயிருந்தது....பார்க்கவே பரிதாபமான காட்சியது...

இனியும் அங்கிருக்காமல்.....தான் திரும்பவும் வருவதாகச் சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறுகிறான்....மாயாவி.

என்ன தம்பி அவங்க உடல்நிலை எப்படியிருக்கு...? இங்க வச்சிருக்காம டவுண் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போங்க.....எப்படியும் அங்க மருந்துவசதிகள் இருக்கும்.....ஆனா போக 300, 400 ஆவது செலவாகும்.....ம்....சரியிங்க என்று இடைமறித்து அறுதல்கூறியவருக்கு தலையாட்டி நன்றி கூறிவிட்டு கோபாலிடம் செல்ல.அப்பா வருவதைக்கண்டு அவனே எழுந்து ஓடிவர....

அப்பா அம்மாவை நான் பார்க்கல்ல.....நான் போயி பார்த்திட்டு வாறன்......நேற்றும் நான் பார்க்கல்ல...இன்னைக்கும் பார்க்கல்ல.....நான் அம்மாவைப்பாத்திட்டு வாறனப்பா.....விடுங்க கையை...

மாயாவியின் கைப்பிடியிலிருந்து உதறியடித்தபடி ஓடிப்போய் மங்காவின் தனிப்பட்ட திரையை விலத்திக்கொண்டு உள் நுழைந்தான் கோபால்........

அவசரமாக ஓடிச்சென்ற தாதியும், மாயாவியும் அவனை பிடித்திழுத்துக்கொண்டு வெளியே வந்தார்கள்.....என்னப்பா பையனை வளர்த்து வச்சிருக்கிறாய்......இந்த மாதிரி முரண்டு பிடிக்கிறானே.......என்ர பிள்ளையாயிருக்கட்டும் இன்னேரம் நாலு அறைவிட்டிருப்பேன்.....ஒரு சொல்லு பேச்சு கேட்காத பையனாயிருக்கான்....

சிலபேர் சும்மாயிருந்தாலும், எரிகிற நெருப்பில எண்ணெய் ஊத்துகிற மொழி போல நேர்சின் பேச்சு.......இதைக்கேட்ட மாயாவிக்கும் கடுப்பேறியது..சளார் என அவன் கன்னத்தைப்பொத்தி ஒரு அறை.....

அதைப்பாராட்டி அப்படிச் சாத்தவேணும்.என்ற நேர்சின் சபாஷ்....இத்தனைக்கும் நடுவில்...

அம்மா.......எனக் கதறித்துடித்து முகத்தை இரண்டுகைகளாலும் பொத்தி கீழே குந்தியிருந்து அழுதான் கோபால்....அந்த வைத்திய பிரிவு எல்லோரையும் சற்று திரும்பி பார்க்கவைத்தது அந்தக்காட்சி.....ஏன் மங்காவின் காதிலும் அந்தக்குரல் ஒலித்தது....ஆனால் அவளால் எதுவும் பேசமுடியாது கண்களைத்திறந்து மூடும் போது வழிந்தோடும் கண்ணீர் மட்டுமே பதிலாக இருந்தது...

அறைந்தபின்புதான் மாயாவிக்கு அடச்சே....என்ன காரியம் செய்துட்டன்.பாவம் புள்ள.அப்படி என்னத்தக்கேட்டுப்புட்டான்......எத்தனை ஆசைகளை தனக்குள்ளே புதைச்சு வச்சு.ஒருநாளாவது அந்தப்பிள்ளைங்க மாதிரி தனக்கு அதுவேணும் இது வேணும் என்று கேட்டிருப்பானா இவன்...அட நான் ஏன் இப்ப மிருகம்போல ஆகுறன்.....கடவுளே என்னப்பா உன் சோதனை.....

வாய்யா.......நாம போவோம்.....

போ நான் வரமாட்டன் போ......

அட வாப்பா.....அப்பாதானே அடிச்சன்.....வாப்பா........கோபாலு நான் பிள்ளைக்கு ஐஸ்பழம் வாங்கித்தாறன் வாப்பா.....எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்கப்பா......

நான் வரல்ல நீங்க போங்கோ.....அடம்பிடிக்கிறான் மீண்டும்.......இவனை இப்படியே விட்டிட்டும் போகமுடியாது....அதனால மாயாவியும் எவ்வளவோ நேர கெஞ்சல்களுக்குப்பின்பு ஒருவாறு தன் அழுகையின் குரலை தாழ்த்திக்கொண்டான்.....இப்போது கூட அவன் சமாதானம் அடைந்ததெல்லாம் பல மாதங்களின் பின்பு ஐஸ்பழம் குடிக்கும் ஆசையில்...

சொன்னபடியே வாங்கிக்கொடுத்தே கோபாலுவையும் கூட்டிக்கொண்டு சாயந்தரம் 4 மணிக்கெல்லாம் கந்தவர்மன் ஐயா வீட்டிற்கச்சென்றான்.....வீட்டுவாசலை கூட்டிக்கொண்டு இருந்த மகேஸ்வரி அம்மாவைக்கண்டவுடன்......

அம்மா.......நான் மாயாவியம்மா....

குரல்கேட்டு...உள் கொழுக்கி போட்டிருந்த கேட்டைத்திறந்து கொண்டு வா மாயாவி வா........என்னப்பா பிரச்சனை...? கொஞ்சம் சொல்லன்.....என்னெண்டுதான் கேட்டுப்பார்ப்போமே...பிறர் கதை கேட்கும் ஆவலில்.....

தன்மனைவி மங்கா கடந்த 5 நாட்களாக படுத்தபடுக்கையாக இருப்பதும், அதற்குரிய வைத்திய செலவிற்கு பணமாக ரூபா 900 அவசரமாகத்தேவைப்படுவதையும் கண் கலங்க உள்ளத்து வேதனையோடு சொல்லிமுடித்தான்....

அம்மா அதற்காகத்தான் ஐயா வரமுதலே இங்க வந்திருக்கிறன்...

ம்..அட நீ என்னப்பா....மக்கு பயனாட்டம்.....அந்த மனுசனிட்ட காசு கறப்பதென்றால் கல்லுல நாருரிக்கிறதுபோல.......நான் நினைக்கல்ல மனுசன் தரும் என்று......பொறு வாறன் என்ற மகேஸ்வரிஅம்மா உள்ளே சென்று ரூபா 100 தாளுடன் திரும்பி வந்தார்.

இந்தாப்பா யானைப்பசிக்கு சோளப்பொரி என்று நினைக்காம இதை வாங்கிக்கோ.....அவரைப்பார்த்து நேரத்தை வீணாக்காம வேறு யாரிட்டையாச்சும் கேட்டுப்பார்....நீ தேங்காய் பறிச்சுக்கொடுக்கிற ஜீவா மாஸ்டரிட்டையும் கேட்டுப்பார்....யாருமே 900 தரமாட்டாங்க......உலகம் அப்படிக்கிடக்கு......கூட இருக்கிற உறவுகளே கும்மாளம் கொட்டிட்டு அங்கால போனப்புறம் கஷ்டமோ, நஷ்டமோ வந்தாக்கூட திரும்பியும் பார்க்கமாட்டாங்கப்பா.....இதுதான் இன்றைய உலகம்.....

அம்மா...நான் அப்படியில்லம்மா......நாங்க சாகுறவரைக்கும் நாயா இங்கேயே காலம் பூராவும் உங்க காலடியில கிடப்போம்....நம்புங்க அம்மா.....இந்தப்பிள்ளையப்பாருங்கம்மா......எங்க இவன் அவன் அம்மாவை இழந்திருவானோ என்று ...

சே.சே...அப்படி எதுவும் நடக்காது......நீ யாருக்கும் அநியாயம் செய்யாதனீ. ஏன் இப்படி எல்லாம் பேசுறாய்.....வீணாக மனதைக் குழப்பாமல் போய் ஆகவேண்டியதைப்பாரப்பா........

அம்மா மங்கேஸ்வரி கொடுத்த 100 ரூபாவையும் கும்புடு போட்டு வாங்கி மடித்து தன் பாக்கெட்டினுள் வைத்துக்கொண்டு........மகனையும் கூட்டிக்கொண்டு நேரே தன் வீட்டிற்குப்போனான்.....இனியும் யாரையும் கேட்டுப்பலனில்லை........டவுணில இருக்கும் வைத்தியசாலைக்கு மங்காவைகூட்டிச்செல்லும் அளவிற்கு அவனிடம் பணமும் இல்லை....என்ன நினைத்தானோ என்னவோ.....வீட்டிற்குள் சென்றவன்......கோபாலுவின் பாடசாலை பையினுள் அவன் உடுப்புகளை அள்ளி திணித்தான்.......என்ன எண்ணிப்பார்த்தால்.....3 நல்ல உடுப்புகளுக்கும் அதிகமிருக்காது......

மாயாவி அடித்த தழும்பு இன்னும் கன்னத்தில் விரலாக பதிவாகயிருந்தது......எதையும் அறியாது இன்னும் குடிச்சு முடிந்த ஈர ஐஸ்பழக்குச்சியை சப்பிக்கொண்டு இருந்தான் கோபால்.....

கோபாலு.......போயி.......போயி....அம்மம்மாக்கு சொல்லிட்டுவா ராசா....

ஏனப்பா.நாங்க எங்க போறம்...?

நான் சொல்லுறன்......முதல்ல அந்தப்பெரியவங்களுக்கு சொல்லிட்டு வாப்பா.....அவசரத்திற்கு அந்த அம்மா உனக்கு ஊட்டி வளர்த்தவங்க....அதை நாம மறக்கக் கூடாதுப்பா.....சொந்த உறவாக இல்லாவிட்டாலும், அதுக்கும் மேலாக அந்தக்காலணியில அவங்களும்...

சரிப்பா........ஆனா சொல்லுங்க.....நாங்க எங்க போறோம்...?

எல்லாம் சொல்லுறன் நீபோய் சொல்லிட்டு வா.....

அவங்க அம்மம்மா கேட்டா என்ன நான் சொல்ல....?

தூரப்போறன்.....திரும்பி அம்மாகூட வருவேன் என்றதை மட்டும் சொல்லு....

ம்..சரிப்பா.....

திரும்பி வந்த கோபாலுவுடன் மீண்டும் பெரியாஸ்பத்திரி நோக்கி அவன் சயிக்கிள் மிதித்தது....

தொடரும்......(வாழ்க்கைக்கு வழி)


--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி.

No comments: