Wednesday, January 14, 2009

மனசாட்சி.....10

மனம் தினம் படும் வேதனையை யாரிடம் போய்கூறுவது....எல்லாமே புது இடம்....பாட்டியின் அதட்டலில் எழுந்த கோபாலுக்கு வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளுக்கான அட்டவனையை பாட்டி வாசித்துக்கொண்டிருந்தார்....
அதன் ஆரம்பமாக கேட்டைத்திறந்து வாசலில் தண்ணீர் தெளித்து முற்றம் கூட்ட அந்தச்சிறுவனை விளக்குமாறும் கொடுத்து அனுப்பினா பாட்டி....
அவன் உயரத்திற்கு இருமடங்காக அந்தத்தடி.....கூட்டிப்பழக்கமில்லாதவன்....கூட்டுகிறான்....கூட்டக்கூட்ட திரும்பத்திரும்ப குப்பை சேருகிறது....

எட்டிவந்து பார்த்த வாசுகி....கோபால்......காற்று இந்தப்பக்கமாக வீசுதடா.நீ எதிர் பக்கமாகநின்று கூட்டினால் கூட்டமாட்டாய்.....அடுத்த பக்கமாக கூட்டு.....சரியா...

நீர் தெளிக்க தேவையில்லை.அவன் கண்ணீர் தரையெங்கும் முத்துமுத்தாய் தரையைத்தொட்டபடி மனம் வேதனைப்படுகிறேன்.பல மணிநேர போராட்டத்தின் பின்பு அவ்விடத்தை தன் சின்னஞசிறு கைகளால் குப்பைகளை அள்ளி துப்பரவு செய்து விட்டு...பாட்டியின் அடுத்த வேலையாக நாய்கூடு துப்பரவு செய்தலுக்கு போகிறான்....

நாயிற்கு கிட்ட போகாமல்.....அழுகிறான்.....தனக்கு மட்டும் கேட்கும் விசும்பலில்.....பயத்தால் அழுகிறான்......இவன் அழும் பாஷை, எங்கோ இவன் இதயத்தில் இருக்கும் அந்த வேதனை ....அந்த ஐந்தறிவு ஜீவன் நாய் பிளாக்கிக்கு.. விளங்கியிருக்கவேணும்....

வாலையாட்டியது......நாக்கை நீட்டிக்கொண்டு மெல்ல கால்களை மடித்து நிலத்தில் வைத்து இருந்து கொண்டு தலையை மேலே உயர்த்திக்கொண்டு மெல்ல ங்..ங்....என்று ஒலி எழுப்பியது அந்த நாய்....

கையை மெதுவாக நீட்டினான்...கோபால்.....கையை நக்கியதுடன்....இழுத்துக்கொண்டான்....விரல்களை பொத்துக்கொண்டு......கண்களை இறுக்க மூடினான்....மீண்டும் நாய் நக்குவதை உணர்ந்து கண்ணைத்திறந்து பார்க்கிறான்....அது இன்னும் கிட்ட அவனருகில் வந்து நின்றது....மீண்டும் மெதுவாகத்தொட...பேசாமல் இருந்த நாயைக்கண்டவுடன்....நாயைப்பார்த்து சிரித்தான்....தடவினான்....

ஓ.......இப்போது அவன் நண்பனாகிவிட்டான்......அந்த சந்தோசத்தில் எழுந்து ஓடினான்.......அந்த நாயும் அவன் பின்னால் ஓடியது....ஒரு சுவர் மறைவில் நின்று எட்டிப்பார்தான்.......அதுவும் எட்டிப்பார்த்தது......அவன் மிகவும் சந்தோசப்பட்டான்......

டேய்......அங்க என்னடா சத்தம்......நாய்கூட்டை துப்பரவாக்கிட்டியோ...

ஊப்ஸ்.....பாட்டி......என்று தலையில கைவைத்துவிட்டு...ஓடி வந்து நாய்க்கூட்டை துப்பரவு செய்தான்....ஆசையாக அந்த வேலையை செய்தான்......சாப்பாட்டுத்தட்டம் எல்லாம் வடிவாகக் கழுவி....அதன் தண்ணீர் வைக்கும் குட்டிச்சட்டி எல்லாம் வடிவாக கழுவி....அழகாக வைத்தான்..

அதன் பின்பு முயல்கூடு துப்பரவு செய்தான்...அதனையும் அவன் அன்போடு அவைகளை தழுவி அவைகளோடு விளையாடி மகிழ்ந்தே செய்தான்.

நாளாந்த வேலைகளில் அவன் கவனம் ஓய்வின்றிச்செல்ல.....பகல் முழுக்க வேலை செய்த அலுப்பில் நன்றாகத்தூங்கிவிடுவான்..அவன் மனதில் அவன் தாய் கண்ணை விட்டு அகலாத கருவிழிபோல மனதில் ஒவ்வொரு நிமிடமும் அவனோடு கூடவே இருந்துகொண்டாள்....

எப்பொழுதுமே....அந்த வீட்டில் பாட்டி முதல்...கடைசிப்பாப்பா வரைக்கும் கோபால்....கோபால் தான்......
அவன் பெயரை சொல்லிச்சொல்லி எல்லா வேலைகளும் நடக்கும்...அவன் தெருமூலையில் இருக்கும் கடைக்குப்போனால்கூட அவன் இல்லாத அந்த அந்த 10 நிமிடமே பெரும் பாதிப்பை உண்டு பண்ணுவது போலயிருக்கும்....

அவனுக்கென்று தனியாக சாப்பாட்டுத்தட்டம், டம்ளர்....இதைவிட ஒரு சின்ன இடம் படுக்கைக்கு....அவன் வாழ்வு......அங்கேயே மேடைபோட்டது. அதில் ராஜாவும் அவன்தான் மந்திரியும் அவன்தான்...

யாருமில்லாத போது பறந்து திரியும் பட்டாம்பூச்சியாய் அவன் சுதந்திரமாக பறப்பான்...

அதிகநேரமாக அடித்துக்கொண்ட டெலிபோன் மணிச்சத்தம் கேட்டு....என்ன மாமி பக்கத்திலதானே இருக்கிறியள் அதை எடுக்கக்கூடாதோ...

ஐயோப்பா....நா மாட்டேன்.....நமக்கேன் ஏன் இந்த வீண்தொல்லை.

ஹலோ.....ம்.சரி அனுப்பிவைக்கிறன்...

என்னவாம் கடைக்கு போனவுடனேயே போன் போடுரார் மகன்..

கோபாலை கடைக்கு அனுப்பிவைக்கட்டாம்...மரக்கறிகள் வந்திருக்காம் குடுத்தனுப்புகிறாராம்.

சொல்லிக்கொண்டே கோபாலை கூப்பிட்டு குளித்துவிட்டு உடுப்பு மாற்றி கடைக்கு ஐயா வரட்டாம் போய் வாறீயா...

சரிம்மா...

அவன் வீதியால போகும்போது ஒரு போதும் நடந்து போகமாட்டான்....ஓட்டம்தான்...ஓடிப்போய் மூச்சுவாங்க கடையில நின்றான்.அது ஒரு சாப்பாட்டுக்கடை...அங்கு சமையல் செய்பவர்கள் முதல் அனைவரும் கோபாலில் மிகவும் பிரியமானவர்கள். அங்கு போனால் அவன் நன்றாக சாப்பிட்டு வருவான். இன்று அங்கு போனவனுக்கு.....ஆச்சரியம் காத்திருந்தது...

புதிய சயிக்கிள் ஒன்றை வேண்டி வைத்திருந்தார்..ஈஸ்வரன்...அன்போடு கோபாலவிடம் கொடுத்தார்.....காலையிலையே கடைக்குப்போய் உனக்காக வாங்கி வந்திருக்கிறன்.....இனி வெய்யிலுக்குள்ள நடந்து வராதே என்ன....விருப்பமா எனக்கேட்டார்...

ஆ........என வாயில் இருகைகளையும் வைத்துக்கொண்டு பிரமித்துப்போய் நின்றான்....அங்கு கொடுத்த பொருட்களையும் வாங்கிக்கொண்டு மின்னலாக வீடுநோக்கி விரைந்து வந்தான் கோபால்....மிகவும் குதூகலகமாக இருந்தான்.சிரித்துக்கொண்டான்.....பாட்டி மட்டும் எரிச்சல் பட்டாங்க.....மற்றப்படி அவன் சயிக்கிளை அங்கவுள்ள வாண்டுகள் அனைவருமே ஆசையாக தொட்டு பார்த்து மகிழ்ந்தார்கள்...
வாசுகியும்.....

கோபால் உனக்கு விருப்பமாகயிருக்கும் என்று நான் தான் ஐயாட்ட சொன்னான்....கவனமாகப் போய்வரவேணும் என்ன....

சரிம்மா.....

மீண்டும் என்ன நினைத்தானோ.......அம்மா......என்று கூப்பிட்டான்.

திரும்பிய வாசுகி என்னப்பா......என்ன.சொல்லு..தயங்காம சொல்லு.....

தாங்ஸ்.....என்றான் தயங்கியபடியும் சின்னசிரிப்புடனும்.

அட சமத்து...இதுகூட சொல்லத்தெரியுமா உனக்கு....சிரித்தக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள் வாசுகி.

அடிக்கடி துடைத்துக்கொண்டு......தனது போர்வையால் சயிக்குளுக்கு போர்த்து விட்டபடி இரவு நித்திரைக்கு போனான் கோபால்....

ஆனாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. தன் அம்மாவிடம் இதனை காட்டவேண்டும் அம்மாவிற்கு இது பற்றி சொல்லவேண்டும் என ஆசைப்பட்டான்.பின்பு ஒரு வித கவலை..மீண்டும் கண்ணீர்..மீண்டும் தூக்கம்..

தூக்கத்தில் கனவில் வந்துபோவதெல்லாம் அவன்தாய் மங்காதான்.அவன் கனவையோ...அவன் பேச வேண்டும் என்று ஆசைப்படும் பேச்சுக்களையோ யாருமே செவிமடுப்பதில்லை. அதற்கு கோபாலுவும் ஒருபோதும் துணிந்து யாருடனும் பேசுவதில்லை.

இனிமையான நாட்களாக அவன் வாழ்வு போய்க்கொண்டிருந்தது.

தொடரும்...
--------------------

கொடுத்து வாழ்.... கெடுத்து வாழாதே...
நிலாவில் உலாவரும் தனிமதி


http://www.thamilworld.com/forum/index.php?showtopic=8714

No comments: